மேலும்

செய்தியாளர்: சிறப்புச் செய்தியாளர்

9 ஆவது ஐ.நா பொதுச்செயலராகத் தெரிவு செய்யப்பட்டார் அன்ரனியோ குட்ரேரெஸ்

அடுத்த ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்ரேரெஸ் நேற்று ஐ.நா பொதுச்சபையினால் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியில் ஐயோ

தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஐயோ என்ற சொல், ஒக்ஸ்போட் ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது. ஒக்போர்ட் ஆங்கில அகராதியின் பிந்திய பதிப்பில், ஐயோ (Aiyo) என்ற சொல் உள்ளடக்கப்பட்டு அதற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா பொதுச்செயலராகிறார் அன்ரனியோ குட்டெரெஸ்

ஐ.நாவின் புதிய பொதுச்செயலராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்டெரெஸ் இன்று அதிகாரபூர்வமாகத் தெரிவு செய்யப்படவுள்ளார்.

நிஷா பிஸ்வாலுடன் சிறிலங்கா கடற்படைத் தளபதி சந்திப்பு

அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வாலைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

‘எப்போதும் அமெரிக்கா உங்களுடன் இருக்கும்’ – சிறிலங்கா அதிபருக்கு தைரியமூட்டிய ஒபாமா

நிலைமாறு கட்டத்தில் உள்ள சிறிலங்கா உலகின் ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்குவதாக, அமெரிக்க அமெரிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடமே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, கிளின்டன் பூகோள முனைப்பு அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

சிறிலங்கா தூதுவரைத் தாக்கிய மேலும் நான்கு பேரைத் தேடுகிறது மலேசிய காவல்துறை

மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் இப்ராகிம் அன்சார் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மேலும் நான்கு பேரைத் தேடி வருவதாக மலேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா தூதரைத் தாக்கிய ஐந்துபேர் மலேசிய காவல்துறையினரால் கைது

கோலாலம்பூரில், மலேசியாவுக்கான சிறிலங்கா தூதுவர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், ஐந்து பேர் மலேசிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மகிந்தவுக்கு எதிராக மலேசியாவில் தொடர்கிறது போராட்டம்

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, மலேசியாவில் நேற்று இரண்டாவது நாளாகவும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

“மகிந்தவே வெளியேறு” – மலேசியாவில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சவை மலேசியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரி, இன்று காலை கோலாலம்பூரில் நூற்றுக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.