மீண்டும் வர்த்தக கப்பல்களுக்கான பாதுகாப்பில் சிறிலங்கா கடற்படை
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொறுப்பு,மீண்டும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா கடல் எல்லைக்குள் நுழையும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கும் பொறுப்பு,மீண்டும் சிறிலங்கா கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ், பணியாற்றிய ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாக சிங்கள வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் இலக்காக கொண்ட, திரிபுபடுத்தப்பட்ட மற்றும் பொய்யான பிரச்சாரங்களால், வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய, ரோம் சட்டத்தை சிறிலங்கா, தற்போது அங்கீகரிக்க வாய்ப்பில்லை என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறிலங்காவின் உள்ளூர் அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட 3 பக்க சிறப்பு இணைப்பு தொடர்பாக, இந்தியத் தூதரகத்திடம் ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
எஸ்டபிள்யூஆர்டி பண்டாரநாயக்க படுகொலைக்குப் பின்னர், சிறிமாவோ பண்டாரநாயக்கவை அரசியலுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகித்தவர், ஹென்பிடகெதர ஞானசீக தேரர் என்ற பௌத்த பிக்கு ஆவார்.
இன்டிபென்டன்ஸ்-ரக கரையோர போர்க்கப்பலான யுஎஸ்எஸ் சாண்டா பார்பரா -எல்சிஎஸ் 32) (USS Santa Barbara -LCS 32) கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
பல தசாப்த கால தண்டனை விலக்குரிமையை முடிவுக்குக் கொண்டு வந்து, கடந்த கால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு ஒரு “வரலாற்று வாய்ப்பு” கிடைத்துள்ளது என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகத்தென்ன தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக உதய கம்மன்பில மீது காணாமல் போனவர்களின் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டவாளர் அச்சலா செனவிரட்ன,குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய – சிறிலங்கா இருதரப்பு கடல்சார் பயிற்சியான SLINEX-2025, நாளை மறுநாள் கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.