மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

செம்மணி புதைகுழி அகழ்வு – சர்வதேச மேற்பார்வை அவசியம்

செம்மணி கூட்டுப் புதைகுழித் தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வில்,  சர்வதேச மேற்பார்வை மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை உறுதி செய்யுமாறு,  சர்வதேச சட்ட நிபுணர்கள் ஆணைக்குழு (ICJ) சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அருண ஜயசேகர பதவியில் இருப்பது நம்பகத்தன்மையை பாதிக்கும்

மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சராகப் பணியாற்றுவது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் நம்பகத்தன்மையைப் பாதிக்கக் கூடும் என்று கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி கைது

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகெத்தென்ன, இளைஞன் ஒருவர் காணாமல் ஆக்கப்பட்ட  குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க எரிபொருள் கொள்வனவு – 1ஆம் திகதிக்குள் தீர்மானிக்க முடியாது

அமெரிக்காவிடம் எரிபொருளைக் கொள்வனவு செய்வது தொடர்பாக, ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் சிறிலங்காவினால் தீர்மானம் எடுக்க முடியாது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரிஐடி அடிப்படை உரிமைகளை மீறியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கம்பஹா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த லக்ஸ்மன் குரேயை, சட்டவிரோதமாக தடுத்து வைத்து, சித்திரவதை செய்ததன் மூலம், காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு அடிப்படை உரிமைகளை மீறியிருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சொத்துக் குவிப்பு முறைப்பாடு- விசாரணையை வரவேற்கிறார் சிறிதரன்

வருமானத்திற்கு அதிகமாக, அதிகளவில் சொத்துக்களை வாங்கியுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியுடன் சிறிலங்கா அதிபர் பேச்சு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி  தூதுவர் ஜமிசன் கிரீருக்கும் (Jamieson Greer) இடையில் மெய்நிகர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சிறிலங்கா படை அதிகாரிகள் குழு இந்தியாவில் பயணம்

இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை வளர்ப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறிலங்கா இராணுவ தளபாட பாடசாலையின்  24 பேர்  கொண்ட குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.

சிறிலங்காவில் அணுமின் நிலையத்துக்கான 5 இடங்கள் தெரிவு

சிறிலங்கா அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து  இடங்களை அடையாளம் கண்டுள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் மீளாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரி கைது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும்  விசாரணைகளின் அடிப்படையில், மட்டக்களப்பு காவல் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.