மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்கா இராணுவத்தின் ஆயுதங்களை கணக்கெடுக்க உத்தரவு

சிறிலங்கா இராணுவத்திடம் உள்ள ஆயுதங்கள், வெடிபொருட்கள் தொடர்பாக கணக்காய்வு செய்வதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த ரொட்றிக்கோ உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பானின் 500 மில்லியன் யென் கொடையை ஏற்றுக் கொள்கிறது சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா கடற்படை தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கு, ஜப்பானிடம் இருந்து 500 மில்லியன் யென் (சுமார் 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்) கொடையைப் பெறுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

போருக்குப் பின் சிறிலங்கா வந்த 700க்கும் அதிகமான வெளிநாட்டு போர்க்கப்பல்கள்

போர் முடிவுக்கு வந்த பின்னர் வெளிநாடுகளின் 700இற்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் சிறிலங்காவுக்கு வந்து சென்றிருப்பதாக, சிறிலங்கா கடற்படையின் வட பிராந்திய கடற்படைத் தளபதி றியர் அட்மிரல் புத்திக லியனகமகே தெரிவித்துள்ளார்.

இந்தியத் தூதுவருடன் நாமல் ராஜபக்ச சந்திப்பு

இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

36 நாடுகள் பங்கேற்கும் சிறிலங்கா கடற்படையின் காலி கலந்துரையாடல்

சிறிலங்கா கடற்படை நடத்தும் 12 வது, காலி கலந்துரையாடல் -சர்வதேச கடல்சார் மாநாடு வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில், வெலிசற கடற்படைத் தளத்தில் இடம்பெறவுள்ளது.

வசந்த கரன்னகொடவை விடுவித்தமைக்கு எதிரான மனு விசாரணைக்கு ஏற்பு

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் இருந்து, முன்னாள் கடற்படைத் தளபதி விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட  மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சென்னைக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவர் நியமனத்தில் சர்ச்சை

சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணைத் தூதரகத்துக்கான துணைத் தூதுவராக கேதீஸ்வரன் கணேசநாதன் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரவி செனிவிரத்னவை விசாரணைக்கு அழைக்கிறது நாடாளுமன்ற குழு

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனிவிரத்னவை உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு விசாரணைக்கு அழைக்கவுள்ளது.

ஓராண்டுக்குள் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு வரைவு சட்டம் இந்த வாரம் சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படும், அதன் பிறகு பொதுமக்களின் ஆலோசனைக்காக சமர்ப்பிக்கப்படும் என, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் இல்லாத பலஸ்தீனம்- நியூயோர்க் பிரகடனத்துக்கு சிறிலங்கா ஆதரவு

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு, ஹமாஸின் தலையீடு இல்லாத, இரு நாடுகள் என்ற தீர்வை முன்வைக்கும், நியூயோர்க் பிரகடனத்தை ஐ.நா பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.