மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

தாஜுதீன் கொலை சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு – ராஜபக்ச குடும்பத்துக்கு அடுத்த பொறி?

ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் மரணம், குற்றவியல் சட்டத்தின் 296ஆவது பிரிவின் கீழ், கொலை போலத் தோன்றுவதாகத் தெரிவித்துள்ள கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ், சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஓரிரு மாதங்களுக்குள் சம்பூர் அனல் மின்நிலைய கட்டுமானப்பணிகள் ஆரம்பம்

சம்பூர் அனல் மின் நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி, மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்படை போர்க்கப்பல் உற்பத்தி பிரிவின் உயர்அதிகாரி சிறிலங்கா வருகை

இந்தியக் கடற்படையின்  போர்க்கப்பல் உற்பத்தி மற்றும் கையேற்றல் பிரிவின் கட்டுப்பாட்டாளர் வைஸ் அட்மிரல் ஜி.எஸ்.பப்பி சிறிலங்கா கடற்படைத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

ஐ.நா அமைதிப்படையில் சிறிலங்காவின் பங்கை அதிகரிப்பது குறித்து சமந்தா பவருடன் மங்கள பேச்சு

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக, ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சுக்களை நடத்தினார்.

பசிலுடன் முரண்பாடுகள் உள்ளன – ஒப்புக்கொள்கிறார் நாமல்

பசில் ராஜபக்ச விடயத்தில் தாமும் விமர்சனங்களைக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச. கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது- ஜோன் கெரி

சிறிலங்காவில் ஜனநாயகத்தின் வெற்றிக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.

மலையகத் தமிழர்களை ராஜபக்ச அரசுக்கு எதிராகத் திருப்பிவிட்டது ‘ரோ’ தான் – கோத்தா

மகிந்த ராஜபக்ச அரசுக்கு எதிராக, மலையகத் தமிழர்களின் வாக்குகளை திசைதிருப்பி விட்டது இந்தியப் புலனாய்வுப் பிரிவான ‘ரோ’ தான் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் நியமனம் – பொன்சேகாவுக்கு மைத்திரி கொடுத்த பதிலடி

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்குப் பதில் நடவடிக்கையாகவே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அதிபர் தேர்தலுக்குப் பின் அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது – சிறிலங்கா நம்பிக்கை

அமெரிக்காவில் வரும் நொவம்பர் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலின் பின்னர், சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பான கொள்கையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார், அமெரிக்காவுக்கான சி்றிலங்கா தூதுவர் பிரசாத் காரியவசம்.

முதலமைச்சர் எதிர்த்தாலும் பலாலி விமான நிலைய அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்படுமாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும் என்று, சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.