மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

அம்பாந்தோட்டையில் ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கேட்கிறது சீனா

அம்பாந்தோட்டையில் சிறப்பு முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு, ஆயிரம் ஏக்கர் நிலத்தை தர வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் சீனா கோரிக்கை விடுத்துள்ளது.

குடாநாட்டு மக்களை மிரள வைத்த மிக் போர் விமானங்கள் – வழக்கமான பயிற்சி என்கிறது விமானப்படை

சிறிலங்கா விமானப்படையின் ஜெட் போர் விமானங்கள் கடந்தவாரம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீது பறந்து, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்திய நிலையில், அது ஒரு வழக்கமான பயிற்சி நடவடிக்கை என்று சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

முடிவடைந்தது பிரகீத் கடத்தல் விசாரணை – கைது செய்யப்படுகிறார் கோத்தா?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தக் கடத்தலுக்கு உத்தரவிட்ட முன்னைய அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் கைது செய்யப்படவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் மங்கள சமரவீரவை எதிர்த்து ஆவேசமாக கருத்து வெளியிட்ட மேஜர் ஜெனரல்

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலணியின் இணையத்தளத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கச் சென்றிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சிறிலங்கா இராணுவத்தினரின் கீழ்ப்படியாமை நிலையை எதிர்கொள்ள நேரிட்டதாக, எக்கொனமி நெக்ஸ்ட் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தியவர்களைத் தாக்கும் திடீர் சுகவீனம் – சிங்கப்பூர் மருத்துவமனையில் ராஜித

சிறிலங்காவின் சுகாதார அமைச்சரான ராஜித சேனாரத்னவுக்கு நேற்று திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக சி்ங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத் தளபதியுடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

அமெரிக்க கடற்படைகளின் மத்திய கட்டளைப் பணியகத்தின் தளபதி வைஸ் அட்மிரல் கெவின் டொனேகனுடன், பாஹ்ரெயினில் உள்ள சிறிலங்கா தூதுவர் கலாநிதி சாஜ் மென்டிஸ் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் நியமனத்துக்கு எதிராக அடிப்படை உரிமைமீறல் மனு

தேசியப் பட்டியல் ஊடாக, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக, சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில், அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான முறைப்பாடுகளுக்கே முன்னுரிமை கொடுக்கப் போகிறதாம் பரணகம ஆணைக்குழு

முக்கியமான முறைப்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து, விசாரணைகளைத் துரிதப்படுத்தி இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்கவுள்ளதாக காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பலாலி விமான நிலையத்தை விரிவாக்கும் இந்தியாவின் திட்டத்துக்கு விக்னேஸ்வரன் எதிர்ப்பு

இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இந்தியாவைத் திருப்திப்படுத்த கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் – எச்சரிக்கிறார் பசில்

இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்காக, சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் மிகக் கடுமையான விலையைக் கொடுக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச.