மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

சிறிலங்காவுடன் உடன்பாடுகள் கையெழுத்திடப்படுமா? – மெளனம் காக்கும் சீனா

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல இருதரப்பு உடன்பாடுகள் கையெழுத்திடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ள போதிலும், அதுபற்றி சீனா அதுபற்றி மௌனம் காத்து வருகிறது.

அனைத்துலக கப்பல் பாதைகளைப் பாதுகாக்கும் பணியில் இறங்குகிறது சிறிலங்கா கடற்படை

அனைத்துலக கடற்பரப்பில் நாடுகடந்த வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா கடற்படைக்குத் தேவையான கப்பல்கள், விமானங்கள் மற்றும் கருவிகள் கொள்வனவு செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

துறைமுக நகரத் திட்ட விவகாரத்தில் இழுபறி – 125 மில்லியன் டொலர் இழப்பீடு கோருகிறது சீனா

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் தாமதித்ததால், பெருந்தொகை இழப்பீட்டை தருமாறும் அல்லாவிட்டால், மேலதிக நிலப்பரப்பை உருவாக்க அனுமதிக்குமாறும் சீன நிறுவனம் கோரியிருக்கிறது.

ரணிலின் பயணத்தின் மூலம் சீனாவுடனான உறவு புதிய உச்சத்தைத் தொடும் – சிறிலங்கா எதிர்பார்ப்பு

சீனாவுடன்  நடத்தப்படவுள்ள இருதரப்பு பேச்சுக்கள் மூலம். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் புதிய உச்சத்தைத் தொடும் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

புலிகளின் பெயரில் படைஅதிகாரிகளை படுகொலை செய்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு

விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, படைஅதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை படுகொலை செய்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக சத்ஹண்ட என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் உடல் எரிக்கப்படவில்லை; புதைக்கப்பட்டது – என்கிறார் சரத் பொன்சேகா

இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் உடல், எரிக்கப்படவில்லை என்றும், அது புதைக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

ஐ.நா அதிகாரிகளுடன் போர்க்குற்ற விவகார அமெரிக்க நிபுணர் பேச்சு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், இன்று கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

விக்னேஸ்வரனைச் சந்தித்தார் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்க நிபுணர்

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்க கட்டளைக் கப்பல் கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது

ஆறுநாள் பயணமாக சிறிலங்கா வந்திருந்த அமெரிக்க கடற்படையின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் புளூ ரிட்ஜ் நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

அமெரிக்க போர்க்குற்ற விவகார நிபுணர் வடக்கு ஆளுனர், பாதுகாப்புச் செயலருடன் சந்திப்பு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் இன்று மாலை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் மற்றும் வட மாகாண ஆளுனர் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.