மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

பேராசிரியரைப் பதிலளிக்க விடாமல் செய்தியாளர்கள் மீது சீறிப் பாய்ந்த சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் பேரவையின் செய்தியாளர் மாநாட்டில், பேராசிரியர் சி.க.சிற்றம்பலத்திடம் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவரைப் பதிலளிக்க விடாமல், செய்தியாளர்கள் மீது சினத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

தமிழ் மக்கள் பேரவைக்கு கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் பேரவை எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே கடமையாற்றும் என வடமாகாண  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் தலைமையை உருவாக்கும் கூட்டம் அல்ல – கருணாநிதி பாணியில் விக்கி அறிக்கை

யாழ்ப்பாணத்தில், நடத்தப்பட்ட இரகசியக் கூட்டத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை ஒரு அரசியற் கட்சியோ, மாற்றுத் தலைமையை ஏற்படுத்துதற்கான ஆரம்பக் கூட்டமோ அல்ல என்று, தி.மு.க தலைவர் கருணாநிதி பாணியிலான கேள்வி – பதில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.

இடம்பெயர்ந்த மக்களை 6 மாதங்களுக்குள் மீளக்குடியேற்றுவதாக சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

வடக்கில் போரினால் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதங்களுக்குள் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படுவர் என்றும், இதற்கென சிறப்பு செயலணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார்.

யாழ். ஆயரைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

தேசிய நத்தார் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

யாழ்ப்பாணத்தில் இரகசியக் கூட்டத்தில் உருவான புதிய அமைப்பு – முதலமைச்சரும் பங்கேற்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்றிருந்த இரகசியக் கூட்டம் ஒன்றில், தமிழ் மக்கள் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாணசபையின் வெள்ள நிவாரண உதவியைப் பெறுவது குறித்து இந்தியா பரிசீலனை

தமிழ்நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வடக்கு மாகாணசபையினால், திரட்டப்படும் நிவாரண நிதி உதவியைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மாகாணசபையின் அதிகாரங்களைப் பிடுங்குகிறது மத்திய அரசு – வட மாகாண முதல்வர் குற்றச்சாட்டு

மாகாணசபைகளிடம் இருந்து அதிகாரங்களைப் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக விசனம் வெளியிட்டுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மத்திய அரசாங்கம் முன்வைத்துள்ள கிராம இராஜ்ஜியத் திட்டம் மற்றொரு அதிகாரப் பறிப்பு முயற்சி என்றும் விமர்சித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ‘இந்தியா கோணர்’ திறந்து வைப்பு

யாழ். பொது நூலகத்தில் “இந்தியா கோணர்” நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பாலிஹக்கார ஆகியோர் திறந்து வைத்தனர்.

காணாமற்போனோருக்கு மரணச்சான்றிதழ் பெறுமாறு அழுத்தம் கொடுக்கும் ஆணைக்குழு

யாழ். மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பான விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழு நடத்தி வரும், அமர்வில் சாட்சியமளிக்கும், உறவுகளிடம், மரணச்சான்றிதழையும், இழப்பீட்டையும் பெற்றுக் கொள்ளுமாறு ஆணைக்குழு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.