மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

பல்கலைக்கழக மோதல்களில் சம்பந்தப்பட்ட 7 மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர் வரவேற்பின் போது இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக ஏழு மாணவர்களுக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம் – சிங்கள மாணவர்கள் வரவில்லை

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிங்கள மாணவர்கள் விரிவுரைகளுக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக்குழு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்டது யாழ்.பல்கலைக்கழகம் – சுமுக நிலையை ஏற்படுத்த தீவிர முயற்சி

விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட மோதலை அடுத்து, யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் சிங்கள – தமிழ் மாணவர்களுக்கிடையில் மோதல்

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட புகுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்வில், வழக்கத்துக்கு மாறாக கண்டிய நடனத்தை உட்புகுத்த முனைந்ததால், தமிழ்- சிங்கள மாணவர்களிடையே மோதல்கள் ஏற்பட்டன.

பொருளாதார மத்திய நிலைய கருத்து வாக்கெடுப்பு – வெற்றிபெற்றது ஓமந்தை

வடக்கு பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைப்பதற்குச் சாதகமாகவே, கூட்டமைப்பின் அதிகளவு நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் வாக்களித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

படையினர் வசமுள்ள காணிகள் அனைத்தும் மீள ஒப்படைக்கப்படாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

வடக்கு கிழக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் முழுமையாக மீள ஒப்படைக்கப்படாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கின் மீது திரும்பும் சீனாவின் கவனம் – அபிவிருத்திக்கு உதவப் போவதாக அறிவிப்பு

முப்பதாண்டு காலப் போரினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு, சீனா உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் நிதியத்தை உருவாக்கும் நியதிச்சட்டத்துக்கு வட மாகாணசபை அங்கீகாரம்

வடக்கு மாகாண முதலமைச்சர் நிதிய, நியதிச்சட்டம், நேற்று வடக்கு மாகாணசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த வடக்கு மாகாணசபையின் 54 ஆவது அமர்வில், முதலமைச்சர் நிதிய நியதிச்சட்ட பிரேரணையை, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமர்ப்பித்தார்.

மூன்று அமைச்சுக்களை மீளப்பெற்றது ஏன்?- முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளக்கம்

வட மாகாண சுகாதார அமைச்சர், சத்தியலிங்கத்திடம் இருந்து மூன்று அமைச்சுப் பொறுப்புக்களை மீளப் பெற்றுக் கொண்டமைக்கான காரணம் குறித்து, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியுள்ளார்.