வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சிறிலங்கா விமானப்படையின் கடல்-வான் மீட்பு ஒத்திகை
வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை, நேற்றுக்காலை கடல்-வான் மீட்பு ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.
வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து சிறிலங்கா விமானப்படை, நேற்றுக்காலை கடல்-வான் மீட்பு ஒத்திகை ஒன்றை நடத்தியுள்ளது.
இந்தியாவின் ஓய்வுபெற்ற மூத்த இராஜதந்திரியான ஜி.பார்த்தசாரதி மற்றும், புதுடெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் அசோக் மாலிக் ஆகியோர், நேற்று யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக கேட்டறிந்தனர்.
வடக்கில், குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள வன்முறைகள், மற்றும் கலாசார சீரழிவுகள் திட்டமிட்ட வாழ்வியல் சீரழிப்பா என்று சந்தேகம் வெளியிட்டுள்ள, யாழ். ஆயர், இந்த நிலையை ஒழிப்பதற்கு அனைத்துத் தரப்பினரும், ஒன்றிணையுமாறு அறைகூவல் விடுத்துள்ளார்.
மன்னாரில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் சிவகரன், நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினரின் புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான நகுலன் இன்று தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஸ்டி ஆட்சிமுறையை உள்ளடக்கியதான, அரசியலமைப்புத் திருத்த யோசனையை வடக்கு மாகாணசபை ஒருமனதாக அங்கீகரித்துள்ளது.
நாட்டைப் பிரிக்காது, நாம் தனித்து வாழும் அதே நேரம், சகல மக்களுடனும் சேர்ந்தே வாழ ஆசைப்படுகின்றோம். இந்தச்சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் நாடு சீரழிந்து போகும். சின்னாபின்னமாகி விடும். என்று தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் (அசோக்), ஈபிடிபி கட்சியில் இருந்து விலகிக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று பிற்பகல் வடக்கு மாகாணசபையில் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசினார்.
அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தை, வரும் 18ஆம் நாளுக்கு வடக்கு மாகாணசபை ஒத்திவைத்துள்ளது.