மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

அமைச்சரவை மாற்றம் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனை – முடிவை நாளை அறிவிப்பார்?

தம்மால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவினால் இரண்டு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவையை மாற்றியமைப்பது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை அறிக்கையை அவையில் சமர்ப்பித்தார் முதலமைச்சர் – விவாதம் ஒத்திவைப்பு

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கை இன்று வடக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவாதத்தை வரும் 9ஆம் நாள் நடத்துவதற்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் – பரபரப்பான சூழலில் இன்று கூடவுள்ளது வடக்கு மாகாணசபை

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை தொடர்பாக வடக்கு மாகாணசபையில் இன்று சிறப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

பளை துப்பாக்கிச் சூடு- சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பிணையில் விடுதலை

பளையில் சிறிலங்கா காவல்துறையினரின் ரோந்து வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி உடனடியாகவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஐங்கரநேசன், குருகுலராசா பதவி விலக வேண்டும் – விசாரணைக்குழு அறிக்கையில் பரிந்துரை

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் குருகுலராசாவும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும், பதவியில் இருந்து விலக வேண்டும் என்று, வட மாகாண  அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு பரிந்துரைத்துள்ளது.

பளை துப்பாக்கிச் சூடு – உரும்பிராய் இளைஞன் சந்தேகத்தில் கைது

பளை- கச்சார்வெளிப் பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக உரும்பிராயைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 10 பாரஊர்திகளில் உதவிப் பொருட்கள் அனுப்பிவைப்பு

சிறிலங்காவின் தென், மேல், சப்ரகமுவ மாகாணங்களில் கடந்தமாத இறுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, வடக்கில் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் உதவிப் பொருட்கள், நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

தீயுடன் சங்கமமானார் அப்பாத்துரை விநாயகமூர்த்தி – பெரும் திரளானோர் அஞ்சலி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் சடடவாளருமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி நிகழ்வுகள் நேற்று பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலையை வெளிப்படுத்தக் கோரி பாரிய போராட்டம்

கடத்தப்பட்டும், படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பளை துப்பாக்கிச் சூடு – முக்கிய துப்புகள் கிடைத்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல்

பளை- கச்சார்வெளியில் சிறிலங்கா காவல்துறை வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பாக முக்கியமான பல துப்புக்கள் கிடைத்துள்ளதாகவும், இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை விரைவில் கைது செய்ய முடியும் என்றும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.