மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை 3 நாட்கள் சிஐடியினர் விசாரிக்க அனுமதி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘மாற்றுத் தலைமைக்கு இடமில்லை; ஒற்றுமையே பலம்’ – விக்னேஸ்வரன் அறிவிப்பு

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை, என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு காவல்துறையினருக்கும் விளக்கமறியல் – இன்று இறுதிச்சடங்கு நடப்பதால் பாதுகாப்பு அதிகரிப்பு

மணல்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா காவல்துறையினரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு காவல்துறைக்கு எதிர்ப்பு – காலையில் மீண்டும் பதற்றம்

மணல்காட்டில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மணல்காடு துப்பாக்கிச் சூடு – அதிகாரி உள்ளிட்ட இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கைது

மணல்காடு பகுதியில் நேற்று சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உதவி ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டை அடுத்து வடமராட்சியில் பதற்றம் – சிறப்பு அதிரடிப்படை குவிப்பு

வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள காவல்துறையினரின் காவலரணும், நெல்லியடியில் காவலர் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.

வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் பலி

வடமராட்சி கிழக்கில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் பலியானதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு முதல்வரைச் சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள  பாரதீய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை  சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம், 54 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

27 ஆண்டுகளாக சிறிலங்கா படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் மற்றும் அதனை அண்டிய 54 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.

சிவராம் கொலையுடன் தொடர்பில்லை – முதல்வரின் குற்றச்சாட்டை மறுக்கிறார் சிவநேசன்

ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக தம்மை யாரும் விசாரணை செய்யவில்லை என்றும்,  வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.