மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக நல்லூரில் பேரணி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் பேரணி மற்றும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வடக்கு அரசியல் குழப்பம் தீரவில்லை – இன்று காலையும் சமரசப் பேச்சு

வடக்கு மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு இன்னமும் முடிவு காணப்படவில்லை என்றும், இன்று காலையும் இதுதொடர்பாக பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வருக்கு ஆதரவாக 15 பேர் கையொப்பம் – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மீது நம்பிக்கை தெரிவித்து 15 உறுப்பினர்கள் நேற்று ஆளுனரிடம் கடிதங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.

சம்பந்தன் – விக்கி பேச்சில் இணக்கம்? : நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படலாம்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் தமிழ் அரசுக் கட்சி கைவிடுவதற்கும், இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுப்பில் அனுப்ப எடுத்த முடிவை  முதலமைச்சர் விலக்கிக் கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – ஆளுனரிடம் கையளிப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு அமைச்சர்களை பதவி விலகவும், இருவரை விடுமுறையில் செல்லவும் முதலமைச்சர் உத்தரவு

வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராசாவையும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனையும், நாளை மதியத்துக்குள் பதவியில் இருந்து விலகுமாறு கோரியுள்ள முதலமைச்சர், ஏனைய இரண்டு அமைச்சர்களையும் விடுமுறையில் செல்லப் பணித்துள்ளார்.

பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது வடக்கு மாகாணசபை

பரபரப்பான சூழலில் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது. அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

ராடர்களால் கடற்படையினருக்கு பாதிப்பு வராதா? – சிறிதரனின் கேள்வியால் வாயடைத்த சுவாமிநாதன்

இரணைதீவு மக்களை மாற்று இடங்களில் குடியமர்த்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சரணடைந்தோர், கைதுசெய்யப்பட்டோர் விபரங்களை வெளியிடுமாறு கட்டளை- சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்கள் மற்றும், படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு முப்படையினர் மற்றும் சிறிலங்கா காவல்துறையினருக்கு இன்று கட்டளையிடுவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்துள்ளார்.