மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் இன்று ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அனைத்துலக சமூகத்துக்கு அம்பலப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று ‘எழுக தமிழ்’ எழுச்சி நிகழ்வு நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பொது அமைப்புகளும், ஆதரவு தெரிவித்துள்ளன.

மன்னாரில் 1400 ஆண்டுகளுக்கு முந்திய குடியிருப்புத் தொகுதி – தொல்பொருள் ஆய்வில் கண்டுபிடிப்பு

மன்னார் – கட்டுக்கரைக்குளம், குருவில் பகுதியில் நடத்தப்படும், அகழ்வாராய்ச்சியில், 1400 ஆண்டுகளுக்கு முன்னர், மக்கள் வசித்ததை உறுதிப்படுத்தும் தொல்பொருள் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையிலேயே இனப்பிரச்சினைக்குத் தீர்வு- யாழ்ப்பாணத்தில் ரணில்

13 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச்சந்தையில் பாரிய தீ – 60இற்கு மேற்பட்ட புடைவைக் கடைகள் நாசம்

கிளிநொச்சி பொதுச்சந்தையில் நேற்றிரவு ஏற்பட்ட பாரிய தீவிபத்தில், தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த 60இற்கு மேற்பட்ட புடைவைக் கடைகளும், அனைத்துப் பழக்கடைகள் முற்றாக எரிந்து நாசமாகின.

பளையில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – நெல்லியடி வாசிகள் ஐவர் பேர் பலி

தென்மராட்சி- பளைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், அந்த இடத்திலேயே நான்கு பேர் பலியானதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலி.வடக்கில் 1000 ஏக்கர் காணிகளைக் கோருகிறது சிறிலங்கா இராணுவம்

தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணிகளை வைத்திருப்பதற்கு அனுமதி அளிக்குமாறு காணி ஆணையாளரிடம் சிறிலங்கா இராணுவம் கோரியுள்ளது. யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் பொறிமுறைக்கே ஐ.நா உதவும் – பான் கீ மூன் உறுதி

பாதிக்கப்பட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய விசாரணைப் பொறிமுறைக்கே ஐ.நா உதவிகளை வழங்கும் என்று, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் தம்மிடம் உறுதியளித்தார் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வீமன்காமத்தில் பான் கீ மூன் – மீளக்குடியேறிய மக்களை சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட  ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், வலி.வடக்கில் அண்மையில் மீளக் குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

யாழ்ப்பாணத்தில் ஐ.நா பொதுச்செயலர் – கூட்டமைப்பையும் சந்தித்தார்

யாழ்ப்பாணத்துக்கு இன்று பயணம் மேற்கொண்ட ஐ.நா பொதுச்செயலர் பான் கீ  மூன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

கூட்டமைப்புடன் இணைந்து ஐ.நா பொதுச்செயலரை சந்திப்பாரா முதலமைச்சர்?

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து சந்திக்க விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ஏற்றுக் கொள்வதா- இல்லையா என்பது குறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்ற வட மாகாண முதலமைச்சர் சி.வி்.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.