மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் தேடுதல் – 27 இந்தியர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்தப்பட்ட தேடுதலின் போது, நுழைவிசைவு விதிமுறைகளை மீறி தங்கியிருந்த 27 இந்தியர்களை சிறிலங்காவின் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இலட்சக்கணக்கான பக்தர்களின் மத்தியில் தேரேறி வந்த நல்லைக் கந்தன் (படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை இலட்சக்கணக்கான அடியார்கள் புடைசூழ மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி கோப்பாயில் இறந்த தனது சகாவுக்கு அஞ்சலி

இந்தியாவின் தென்பிராந்திய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் இன்று கோப்பாயில் அமைந்துள்ள இந்திய இராணுவ அதிகாரியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞன் சிறிலங்கா அதிரடிப்படையால் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டில், ஆவா குழுவின் உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொருவரும் கைது

கொக்குவிலில் இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த மற்றொருவரையும் நேற்று கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் சத்தியலிங்கம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து மருத்துவ கலாநிதி சத்தியலிங்கம் விலகியுள்ளார். வடக்கு மாகாண அமைச்சரவையில் பங்கேற்பதில்லை என்று தமிழ் அரசுக் கட்சி எடுத்துள்ள முடிவுக்கு அமைய அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர். சி.வி.விக்னேஸ்வரனுக்கு நேற்றுமாலை அனுப்பி வைத்தார்.

யாழ். குடாநாட்டில் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் தேடுதல் – 38 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில், சிறப்பு அதிரடிப்படையினர் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இன்று இன்று காலை வரை நடத்திய பரவலான தேடுதல்களில் 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையை விட்டு வெளியேறுகிறது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையில் இருந்து முழுமையாக வெளியேறுவதற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளை குற்றம்சாட்டவில்லை – முதலமைச்சர் குத்துக்கரணம்

வடக்கிலும் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தாம் கூறியது முன்னாள் போராளிகளை அல்ல என்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வல்வெட்டித்துறையில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொக்குவில் வாள்வெட்டு – மற்றொரு இளைஞனும் கைது

கொக்குவிலில் கடந்த மாதம் 30 ஆம் நாள், இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், மற்றொரு இளைஞனைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.