மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

நிமால், அற்புதன், மகேஸ்வரி – ஈபிடிபியின் படுகொலைகளை அம்பலப்படுத்திய மூத்த உறுப்பினர்

ஊடகவியலாளர்கள் நிமலராஜன், நடராஜா அற்புதராஜா, கே,எஸ்.ராஜா மற்றும் சட்டவாளர் மகேஸ்வரி வேலாயுதம் உள்ளிட்டோரை ஈபிடிபியினரே படுகொலை செய்ததாகவும், சிறிலங்கா படையினருடன் இணைந்து இதுபோன்ற கொலைகள், ஆட்கடத்தல்களில் ஈபிடிபி ஈடுபட்டதாகவும் அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

வடக்கு முதலீட்டாளர் மாநாட்டை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார்.

சம்பந்தன் மீது ஒலிவாங்கியை வீசித் தாக்கவில்லை – அன்ரனி ஜெகநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர்

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், வலி.வடக்கில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார்.

யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர் – நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுக்களை நடத்தினார்.

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மூவர் குழு

வடக்கு மாகாணசபையின் அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தமிழரின் தனித்துவத்தை வலியுறுத்தினார் விக்னேஸ்வரன்

சிறிலங்காவுக்கு மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், நேற்று யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுனரைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

பல்கலைக்கழக மோதல்களில் சம்பந்தப்பட்ட 7 மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட புகுமுக மாணவர் வரவேற்பின் போது இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக ஏழு மாணவர்களுக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம் – சிங்கள மாணவர்கள் வரவில்லை

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்களின் கல்விச் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சிங்கள மாணவர்கள் விரிவுரைகளுக்கு வரவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.பல்கலைக்கழக மோதல் குறித்து விசாரிக்க மூவர் அடங்கிய விசாரணைக்குழு

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞானபீட மாணவர் வரவேற்பு நிகழ்வில். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, சிங்கள அதிகாரி ஒருவர் தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.