மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

வித்தியா கொலை வழக்கில் 7 பேருக்கு மரணதண்டனை – 3 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள்  குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.

சுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா – நீதிபதி குற்றச்சாட்டு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை தப்பிக்க வைக்க இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் முனைந்துள்ளார் என்று நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

இரண்டு நீதிபதிகள் ஒரே தீர்ப்பு – நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், தீர்ப்பாயத்தின் தலைவரான, நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தனது தீர்ப்பை வாசித்து முடித்துள்ள நிலையில், தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான, மாணிக்கவாசகர் இளஞ்செயழியன் தனது தீர்ப்பை படித்து வருகிறார்.

வித்தியா கொலை வழக்கு – 4 எதிரிகள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதை உறுதிப்படுத்தியது தீர்ப்பாயம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில், நான்கு எதிரிகள் கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டனர் என்பதை, மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் உறுதி செய்துள்ளது.

332 பக்கங்களில் வித்தியா கொலை வழக்கின் தீர்ப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் தீர்ப்பு, யாழ். மேல் நீதிமன்றத்தில் தற்போது வாசிக்கப்பட்டு வருகிறது.

வித்தியா கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கிறது சிறப்பு தீர்ப்பாயம்

சிறிலங்காவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.

தியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி

இந்திய- சிறிலங்கா அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு இன்று நல்லூரில் இடம்பெற்றது.

தொடர்ந்து போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது இடைக்கால அறிக்கை – முதலமைச்சர்

அரைகுறைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்தாகாது. புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்ந்து போராட வேண்டிய நிர்ப்பந்தத்தையே  எமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளிகளின் நிலை குறித்து யாழ். படைத் தளபதியுடன் சுவிஸ் அதிகாரிகள் ஆலோசனை

வடக்கில் முன்னாள் போராளிகளின் நிலை மற்றும் அவர்களுக்கான சவால்கள் தொடர்பாக, சுவிட்சர்லாந்தின் புலம்பெயர்தல் தொடர்பான இராஜாங்க செயலகத்தின் ஆய்வாளர் அன்ட்ரேஸ் ஸ்மிட் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெற்றியாராச்சியுடன் கலந்துரையாடியுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின், 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று ஆரம்பமாகின.