மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

ஏறுதழுவுதல் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய மாணவன் விபத்தில் பலி

கிளிநொச்சியில் நேற்றுமாலை நடந்த ஏறுதழுவுதல் தடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று விட்டுத் திரும்பிய ஊடகத்துறை மாணவன் விபத்து ஒன்றில் சிக்கி மரணமானார்.

யாழ்ப்பாணத்திலும் ஏறுதழுவுதலுக்கு ஆதரவான போராட்டம் – ஒளிப்படங்கள்

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஏறுதழுவுதலுக்கு (ஜல்லிக்கட்டு)  விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி தமிழ்நாடு எங்கும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், அதற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்திலும், கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

வல்வெட்டித்துறை வானில் பறந்த வித்தியாசமான உருவங்கள் – காட்சிகளில் பட்டப்போட்டி

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் நேற்றுமாலை நடத்தப்பட்ட பட்டப் போட்டியில் வித்தியாசமான உருவங்களில் தயாரிக்கப்பட்ட பட்டங்கள் வானத்தில் பறக்கவிடப்பட்டன.

ஊறணியில் 400 மீற்றர் கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி

வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறிலங்கா படையினர், நேற்று அனுமதி அளித்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 32 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று ஆரம்பமாகி, இன்றும் இடம்பெற்று வருகிறது. யாழ். பல்கலைக்கழக வேந்தர் சி.பத்மநாதன் தலைமையில் நேற்றுக்காலை 9 மணியளவில் முதல் அமர்வாக படடமளிப்பு விழா இடம்பெற்றது.

அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை வடக்கு மாகாணசபை நிராகரிப்பு

சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த அபிவிருத்தி சிறப்பு ஒழுங்குகள் சட்டமூலத்தை, வடக்கு மாகாணசபை இன்று ஒருமனதாக நிராகரித்துள்ளது.

சாவகச்சேரி கோர விபத்தில் 10 பேர் பலி – 20 பேர் காயம்

சாவகச்சேரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில், தென்னிலங்கையில் இருந்து நயினாதீவுக்கு யாத்திரை சென்ற 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.

வட மாகாணசபைக்கு தனியான தேசிய கீதமா? – அவைத் தலைவர் நிராகரிப்பு

வடக்கு மாகாணசபை தனியான தேசிய கீதம் ஒன்றை இயற்றவுள்ளதாக, சிங்கள நாளிதழான, திவயின நேற்றுமுன்தினம் வெளியிட்டிருந்த செய்தியை வடமாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நிராகரித்துள்ளார்.

நாரந்தனை தாக்குதல் வழக்கில் ஈபிடிபியினர் மூவருக்கு மரணதண்டனை

ஊர்காவற்றுறை- நாரந்தனையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை அணியினர் மீது தாக்குதல் நடத்தி, இருவரைப் படுகொலை செய்து, 18 வரையானோரைக் காயப்படுத்திய, ஈபிடிபியினர் மூவருக்கு யாழ்.மேல் நீதிமன்றம் இன்று இரட்டை மரணதண்டனை விதித்துள்ளது.

வடக்கு மாகாணசபையில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி – அரைக்கம்பத்தில் பறக்கும் கொடி

மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாணசபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கைதடியில் உள்ள வடக்கு மாகாணசபையின் அவையில் இன்று நடந்த அமர்வின் தொடக்கத்தில் ஈழத்தமிழ் மக்களின் சார்பில், சபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினர்.