ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம்
ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த தொடருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஆனையிறவில் புதிய தொடருந்து நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த தொடருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சுன்னாகத்தில் சிறிலங்கா காவல்துறைப் புலனாய்வாளர்கள் இருவர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுக்கு உரிமை கோரியுள்ள ஆவா குழு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நேற்று வடக்கில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படட அதேவேளை, நேற்றிரவு இலக்கத்தகடு இல்லாத வாகனத்தில் வந்தவர்கள் மூன்று இளைஞர்களை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலைகளைக் கண்டித்தும், இந்தச் சம்பவத்துக்கு நீதிகோரியும் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தினால் வடக்கு மாகாணத்தில் இயல்பு வாழ்க்கை முற்றாகச் செயலிழந்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது.
கொக்குவிலில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், இந்தப் படுகொலைக்கு விரைவான நீதி கோரியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை யாழ். மாவட்டச் செயலகத்தையும், வடமாகாண ஆளுனர் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
சுன்னாகம் நகரில் மூகமூடி அணிந்து உந்துருளிகளில் வந்த மர்ம நபர்கள் வாளால் வெட்டியதில், சிறிலங்கா காவல்துறையின் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் இருவர் காயமடைந்தனர். இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொக்குவில் பகுதியில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், சிறிலங்கா காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாளை மறுநாள் வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உக்ரேனில் காலமான இளம் ஊடகவியலாளரும், பிரபல கேலிச்சித்திர வரைஞருமான அஸ்வின் சுதர்சனின் இறுதிநிகழ்வு நேற்று மாதகலில் இடம்பெற்றது.
கொக்குவில் – குளப்பிட்டிச் சந்தியில் நேற்றுமுன்தினம் இரவு இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சிறிலங்கா காவல்துறையினரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.