மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

உதவி ஆய்வாளர் சிறீகஜன் வெளிநாடு செல்ல தடை – கைது செய்வதற்கு சிஐடி தீவிர முயற்சி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் என்பவரை தப்பிக்க உதவினார் என்று குற்றம்சாட்டப்படும், சிறிலங்கா காவல்துறையின் உதவி ஆய்வாளர் சிறீகஜன் நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டெனீஸ்வரனுக்கு பதிலாக விந்தனை அமைச்சராக நியமிக்குமாறு முதலமைச்சருக்கு ரெலோ பரிந்துரை

வடக்கு மாகாண அமைச்சரவையில் தமது கட்சியின் சார்பில் அமைச்சராக நியமிக்கப்பட்ட, பா.டெனீஸ்வரனை, அந்தப் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தமது கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை அமைச்சராக நியமிக்குமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ரெலோ கடிதம் அனுப்பியுள்ளது.

வித்தியா கொலை வழக்கு விசாரணை இன்று மீண்டும் ஆரம்பம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பான விசாரணைகள், யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு அரசியல்வாதிகளே நாவற்குழி விகாரை அபிவிருத்திக்கு தடை- விகாராதிபதி குற்றச்சாட்டு

வடக்கில் உள்ள சில தீவிரப் போக்குடைய அரசியல்வாதிகளே நாவற்குழியில் உள்ள சிறீ சமிதி சுமண விகாரையின் அபிவிருத்திக்குத் தடையாக இருப்பதாக, அதன் விகாராதிபதியான ஹன்வெல்ல ரத்னசிறி தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்கவை 3 நாட்கள் சிஐடியினர் விசாரிக்க அனுமதி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை தப்பிக்க உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதி காவல்துறை மா அதிபர் லலித் ஜெயசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

‘மாற்றுத் தலைமைக்கு இடமில்லை; ஒற்றுமையே பலம்’ – விக்னேஸ்வரன் அறிவிப்பு

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமைக்கு ஒருபோதும் இடமில்லை, என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இரண்டு காவல்துறையினருக்கும் விளக்கமறியல் – இன்று இறுதிச்சடங்கு நடப்பதால் பாதுகாப்பு அதிகரிப்பு

மணல்காடு பகுதியில் மணல் ஏற்றிச் சென்றதாக கூறப்படும் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சிறிலங்கா காவல்துறையினரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வடமராட்சியில் வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு காவல்துறைக்கு எதிர்ப்பு – காலையில் மீண்டும் பதற்றம்

மணல்காட்டில் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலையில் பருத்தித்துறை- கொடிகாமம் வீதியில் ரயர்கள் கொளுத்தப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

மணல்காடு துப்பாக்கிச் சூடு – அதிகாரி உள்ளிட்ட இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் கைது

மணல்காடு பகுதியில் நேற்று சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, உதவி ஆய்வாளர் ஒருவரும், காவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டை அடுத்து வடமராட்சியில் பதற்றம் – சிறப்பு அதிரடிப்படை குவிப்பு

வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள காவல்துறையினரின் காவலரணும், நெல்லியடியில் காவலர் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.