மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

அடுத்த கட்டத் தலைமைக்கு வழி விட வேண்டும் – விக்னேஸ்வரன்

அடுத்த கட்ட இளம் தலைமை அடையாளப்படுத்தப்பட்டு, அதிகாரத்தில் அமர்த்தப்பட்டு, போதிய அரசியல் அறிவு மற்றும் அனுபவத்தைப் பெறுவதற்கு, அறுபது வயதைக் கடந்த தமிழ்த் தலைமைகள்,  இடமளிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

தமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.

பலாலி படைத்தள நுழைவாயிலுக்கு முன்பாக பெருமளவு மக்கள் போராட்டம்

பலாலி படைத்தளக் குடியிருப்பு வளாக (cantonment) நுழைவாயிலுக்கு முன்பாக, வலி.வடக்குப் பகுதி மக்கள் நேற்று பெரியளவிலான போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

ஈபிஆர்எல்எவ் பிரிந்து செல்வதால் தமிழ் அரசுக் கட்சிக்கு பாதிப்பு இல்லை – சிவிகே

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொள்ளும் முடிவை எடுத்த, ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்காக வருத்தப்படுவதாக வட மாகாணசபையின் அவைத் தலைவரும், தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசுக் கட்சியுடனான உறவுகளை முறித்துக் கொண்டது ஈபிஆர்எல்எவ்

தமிழ் அரசுக் கட்சியுடன் இனிமேல் இணைந்து செயற்படப் போவதில்லை என்றும், அதன் சின்னத்தில் போட்டியிடப் போவதில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஈபிஆர்எல்எவ் தெரிவித்துள்ளது.

அரியாலை படுகொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை

அரியாலை கிழக்கு- மணியம்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இந்தக் கொலைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரியாலை படுகொலை – இரண்டு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கைது

அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியாலை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, வாகனங்கள் சிறப்பு அதிரடிப்படை முகாமில் மீட்பு

அரியாலை கிழக்கு – மணியம்தோட்டம், உதயபுரம் பகுதியில், இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கர வண்டி ஆகியன, யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிடுங்கள் – சந்திரிகாவுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர நீதிமன்றத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றுவதற்கு உதவுமாறு கோரி, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்குத் தடை – விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு

யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.