மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

சுமுகமான சூழலில் வடக்கு மாகாணசபை அமர்வு – இரண்டு அமைச்சர்கள் மீதே புதிய விசாரணை

புதிதாக அமைக்கப்படும் விசாரணைக் குழு போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரனின் கீழ் உள்ள துறைகளிலும், சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் கீழ் உள்ள துறைகளிலும் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்தே விசாரணை நடத்தவுள்ளது.

முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றது தமிழ் அரசுக் கட்சி

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் மீளப் பெற்றுள்ளனர்.

கல்வி, விவசாய அமைச்சுக்களைப் பொறுப்பேற்றார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று பிற்பகல், ஆளுனர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் கல்வி மற்றும் விவசாய அமைச்சுப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

வட மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா பதவி விலகினார் – நெருக்கடி தணிகிறது

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா இன்று மாலை பதவியில் இருந்து விலகும் கடிதத்தை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளித்துள்ளார்.

அவைத் தலைவர் விவகாரம் வெடிக்காது – இணக்கப்பாட்டுடன் செயற்பட முடிவு

வடக்கு மாகாண அரசியலில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சபையை சுமுகமான முறையில் தொடர்ந்து நடத்திச் செல்வதில் கவனம் செலுத்தப்படும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அவைத் தலைவர் விவகாரத்தில் புதிய சர்ச்சை வெடிக்கும் ஆபத்து

வடக்கு மாகாண அரசியலில் கடந்த ஒருவாரமாக ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்ற நிலையில், வடக்கு மாகாண அவைத் தலைவர் தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கும் கருத்து, புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீளப் பெறப்படும் – விக்னேஸ்வரனுக்கு சம்பந்தன் கடிதம்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீளப் பெறப்படும் என்று வடக்கு மாகாண ஆளுனருக்கு தொலைபேசி மூலம் அறிவித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

விட்டுக்கொடுப்புடன் நடந்து கொள்ளுங்கள் – யாழ். ஆயர், நல்லை ஆதீனம் கூட்டாக கோரிக்கை

தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளியாமல், சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துணர்வுடனும், விட்டுக் கொடுப்புடனும் தமது பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்று நல்லை ஆதீன குரு முதல்வரும், யாழ். மறைமாவட்ட ஆயரும் இணைந்து கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அமைச்சர்களை கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தமாட்டேன் – சம்பந்தனுக்கு விக்கி கடிதம்

விசாரணைக்குழுவினால் குற்றம்சுமத்தப்படாத இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தமாட்டேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

வடக்கு அரசியல் நெருக்கடி முற்றுகிறது – மாறி மாறி பந்து வீசும் ஆளும்கட்சி அணிகள்

வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும், ஆதரவாகவும், ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது.