மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

ஈபிஆர்எல்எவ்வுக்குள் குழப்பம் – தமிழ் அரசுக் கட்சிக்கு தாவினார் ரவிகரன்

வடக்கு மாகாணசபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினரான துரைராசா ரவிகரன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

சர்வேஸ்வரனைக் கைவிட்டார் விக்னேஸ்வரன்

சிறிலங்கா தேசியக்கொடியை ஏற்ற மறுத்த வடமாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், தனது எதிர்ப்பை வேறு வழியில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும், தேசியக் கொடியையும் தேசிய கீதத்தையும் புறக்கணிப்பது எமது மக்கள் யாவரையும் புறக்கணிப்பது போலாகும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கொடியை ஏற்ற மறுத்த கல்வி அமைச்சர் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை கேட்கிறார் ஆளுனர்

சிறிலங்காவின் தேசியக்கொடியை ஏற்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுப்புத் தெரிவித்தமை தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரவுள்ளதாக வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இயக்கப்படும் வாள்வெட்டுக் குழுக்கள் – சிறிலங்கா அமைச்சர் கூறுகிறார்

வடக்கில் மீண்டும் ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களைத் தலையெடுக்க விடமாட்டோம் என்று சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள வாள்வெட்டுகள் போன்ற வன்முறைச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு உத்தரவு

சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட யாழ். மேல் நீதிமன்றம், சிறிலங்கா இராணுவத் தளபதியை நீதிமன்றில் முன்னிலையாக உத்தரவிட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 402 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவுள்ள 468,476 வாக்காளர்கள்

வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், 402 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

3 கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்கல்வி மாணவர்கள் யாழ்ப்பாணத்தில் பாரிய பேரணி

மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் இன்று காலை பாரிய கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர்.

துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை

மாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை  மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதில் தமிழ் மக்கள் பேரவை ஆர்வம்

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் கலந்துரையாடல்களையும் ஆரம்பித்திருப்பதாக தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.

வடக்கில் கடும் மழைக்கு வாய்ப்பு – தயார் நிலையில் அதிகாரிகள்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலக் குழப்பத்தினால், சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் மிகக் கடுமையான மழையும் கடும் காற்றும் இருக்கும் என்று சிறிலங்கா வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.