துயிலுமில்லங்களில் வேண்டாம் அரசியல் – மாவீரர் குடும்பங்களின் சார்பில் கோரிக்கை
மாவீரர் நாளன்று மாவீரர் துயிலுமில்லங்களில், பிரதான சுடரை மாவீரர் ஒருவரின் மனைவி, கணவன், பெற்றோர் அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர் குடும்பங்கள் சார்பில், முன்னாள் போராளியும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமாரு மனோகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.