மேலும்

செய்தியாளர்: யாழ்ப்பாணச் செய்தியாளர்

அரியாலை கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, வாகனங்கள் சிறப்பு அதிரடிப்படை முகாமில் மீட்பு

அரியாலை கிழக்கு – மணியம்தோட்டம், உதயபுரம் பகுதியில், இளைஞன் ஒருவரைச் சுட்டுக் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, உந்துருளி, முச்சக்கர வண்டி ஆகியன, யாழ். பண்ணையில் உள்ள சிறப்பு அதிரடிப்படை முகாமில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

அரசியல் கைதிகள் விவகாரத்தில் தலையிடுங்கள் – சந்திரிகாவுக்கு முதலமைச்சர் அவசர கடிதம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளை அனுராதபுர நீதிமன்றத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்றுவதற்கு உதவுமாறு கோரி, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்களுக்குத் தடை – விடுதிகளில் இருந்து வெளியேற உத்தரவு

யாழ். பல்கலைக்கழக பிரதான வளாகத்துக்குள் மாணவர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்.பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடியாகத நிறைவேற்றக் கோரியும், அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் மிருக பலி வேள்விகளுக்குத் தடை

வடக்கு மாகாணத்தில் உள்ள இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவதை முற்றாகத் தடை செய்து, யாழ். மேல் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

வடக்கு- கிழக்கு தழுவிய கையெழுத்து திரட்டும் போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குதிப்பு

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடன் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரியும், வடக்கு- கிழக்கு தழுவிய ரீதியிலான கையெழுத்துத் திரட்டும் போராட்டம் ஒன்றை பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அரியாலையில் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு

அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றும் வரை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா அதிபருக்கு யாழ்ப்பாணத்தில் கருப்புக் கொடியுடன் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் வந்துள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகே கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.