இன்று காலை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி சென்றுள்ளார்.
சிறிலங்காவில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் படகு ஒன்றில் இலட்சதீவு நோக்கிப் புறப்பட்டுள்ளதாக, கிடைத்த புலனாய்வு அறிக்கைகளை அடுத்து, இந்தியா பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை சிறிலங்கா கோரியதாக, இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சிறிலங்காவுக்கு உதவுவதற்காக இந்தியா தனது சிறப்புப் படையான என்எஸ்ஜி எனப்படும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவின் நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, இன்று திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, தற்போது மூன்று நாட்கள் பயணமாக கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் தென்பிராந்திய தலைமையகத்தில் தங்கியுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக நேற்று திருமலையை சென்றடைந்தார்.