மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

கோத்தாவுடனான பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்தது – மோடி

சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேற்று நடத்திய பேச்சு ஆக்கபூர்வமானதாக இருந்ததது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தமிழர் பிரச்சினை குறித்து மூச்சு விடாத சிறிலங்கா அதிபர்

தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்னெக்கும் – இந்தியப் பிரதமர் நம்பிக்கை

சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல்முறையை சிறிலங்கா  அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் கோத்தா கொடுத்த வாக்குறுதி – ஜெய்சங்கர்

அனைத்து இலங்கையர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அதிபராக தாம் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தலை உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியா

சிறிலங்காவில் நடக்கவுள்ள அதிபர் தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்று, இந்தியாவின் ‘எகொனமிக் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

”நானே இந்தியாவின் மிகச்சிறந்த நண்பன்” –  மகிந்த செவ்வி

சிறிலங்காவில் எங்களால் மட்டுமே பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் அளிக்க முடியும் என்பதை இந்தியா புரிந்து கொண்டிருப்பதாகவும், இந்தியாவின் மிகச் சிறந்த நண்பனாக தாமே இருப்பதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டது இந்தியாவின் உள்விவகாரம் – சிறிலங்கா பிரதமர்

இந்தியாவில் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு, ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் (வயது-67) நேற்றிரவு மாரடைப்பினால் மரணமானார்.

சிறிலங்காவுக்கு குறைந்த நிதி ஒதுக்கீடு – இந்தியா மீது கொழும்பு வருத்தம்

இந்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில், ஏனைய அண்டை நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விட குறைந்தளவு நிதியே சிறிலங்காவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இது குறித்து சிறிலங்கா வருத்தமடைந்துள்ளது என்றும் ‘இந்தியா ருடே’ செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவுடனான மூலோபாய உறவு வலுப்பெறும் – இந்தியப் பிரதமர்

சிறிலங்காவுக்கும், மாலைதீவுக்கும் தாம் மேற்கொள்ளவுள்ள பயணங்களின் மூலம், இரண்டு அண்டை நாடுகளுடனுமான, இருதரப்பு மற்றும் மூலோபாய உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.