மேலும்

செய்தியாளர்: இந்தியச் செய்தியாளர்

இலங்கைத் தமிழர் விவகாரத்தை கைகழுவியது இந்தியா

இந்தியாவிலும், சிறிலங்காவிலும், 2014ஆம் ஆண்டுக்கு பின், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலும் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்த, இலங்கைத் தமிழர் விவகாரம், முக்கியத்துவத்தை இழந்து விட்டதாக, இந்தியாவின் மூத்த ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள நூலில் கூறப்பட்டுள்ளது.

உஜ்ஜெயின் கும்பமேளா – ஒரே மேடையில் மைத்திரி, மோடி, சம்பந்தன்

இந்தியாவின் உஜ்ஜெயின் நகரில் நடைபெறும் கும்பமேளாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அனைத்துலக மாநாட்டில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

மைத்திரியுடனான சந்திப்பு – மீனவர்கள் பிரச்சினைக்கே முக்கியத்துவம் அளித்தார் மோடி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நேற்று நடந்த இருதரப்புப் பேச்சுக்களில், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் விவகாரத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக புதுடெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார் சிறிலங்கா அதிபர்

இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். புதுடெல்லியில் இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

புதுடெல்லி சென்றடைந்தார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, இரண்டு நாள் பயணமாக இன்று பிற்பகல் புதுடெல்லியைச் சென்றடைந்தார். லண்டனில் இருந்து புதுடெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா அதிபரை, இந்தியாவின் திட்டமிடல் மற்றும் பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித்சிங் வரவேற்றார்.

உறவுகளை வலுப்படுத்த பங்களிப்பார் மைத்திரி – இந்தியா நம்பிக்கை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று புதுடெல்லிக்கு மேற்கொள்ளும் பயணத்தின் மூலம் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்புவதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மைத்திரி வருகைக்காக சாஞ்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தை முன்னிட்டு, இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை பாதியாக வெட்டிக் குறைத்தது இந்தியா

இந்திய வெளிவிவகார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகளை, இந்திய நிதியமைச்சு வெட்டிக் குறைத்திருப்பதால், சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு கொடைகள், கடன்களை வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கும்பமேளாவில் பங்கேற்க வரும் 14ஆம் நாள் இந்தியா செல்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினில் நடக்கும் பிரபலமான, கும்பமேளா நிகழ்வில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் இந்தியா செல்லவுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை தண்டனைக் கைதிகள் – மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லையாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகிய  7 பேரின் விடுதலை தொடர்பாக, இந்திய மத்திய அரசு இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.