மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்? – காலையில் நிலவரம் தெரியவரும்

தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 232 தொகுதிகளுக்கான வாக்களிப்பு கடந்த 16ஆம் நாள் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் மழையால் குறைந்தது வாக்களிப்பு – யாருக்குச் சாதகம்?

தமிழ்நாட்டில் நேற்று நடந்த சட்டமன்றத் தேர்தலில், 73.85 வீதமான வாக்காளர்களே வாக்களித்திருப்பதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 232 தொகுதிகளுக்கு நேற்றுக்காலை 7 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை வாக்களிப்பு இடம்பெற்றது.

தமிழ்நாட்டில் வாக்களிப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பம் – இரு தொகுதிகளில் ஒத்திவைப்பு

தமிழ்நாடு, மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கான தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது. இன்று காலை காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை வாக்களிப்பு இடம்பெறும்.

ஜெயலலிதாவை எதிர்த்து 45 பேர் போட்டி – சூடுபிடிக்கிறது தமிழ்நாடு தேர்தல் களம்

எதிர்வரும், 16ஆம் நாள் நடக்கவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும், 3,794 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக, தேர்தல் ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், அதிகபட்சமாக, முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும், 45 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி – ஜெயலலிதா குற்றச்சாட்டு

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கபட நாடகம் ஆடி, அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று அதிமுக பொதுச்செயலரும், தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க இந்திய மத்திய அரசு மறுப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய  7 பேரை விடுவிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முடிவை, இந்திய மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையே பாலம் அமைப்பதில் இந்தியா உறுதி

பாக்கு நீரிணையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்தில், இந்திய மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக, வீதிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்காக குரல் கொடுத்த நகைமுகன் மதுரையில் காலமானார்

தமிழ்நாட்டில், ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த ஊடகவியலாளரும்- தனித் தமிழர் சேனையின் தலைவருமான க.நகைமுகன் தனது 66 ஆவது வயதில்  நேற்று மதுரையில் காலமானார்.

பொருந்தா இரக்கம் அல்ல – ‘தினமணி’ ஆசிரியர் தலையங்கம்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பின் அம்சங்களை, அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள பொறுப்புடன் தமிழக அரசின் கோரிக்கையைப் பரிசீலிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டிருப்பது இந்த 7 பேரும் விடுதலை செய்யப்படும் வாய்ப்புகள் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்கிறது.

ராஜீவ் காந்தி கொலை: தண்டனைக் கைதிகளின் விடுதலையில் புதிய சிக்கல்

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரை விடுவிக்கும் தமிழ்நாடு மாநில அரசின் நடவடிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.