மேலும்

செய்தியாளர்: அ.எழிலரசன்

தமிழ்நாட்டில் மே 16ஆம் நாள் நாள் சட்டமன்றத் தேர்தல் – இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழ்நாடு, அசாம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புகளை இந்தியாவின் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நசீம் சைதி சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க இந்திய அரசு பச்சைக்கொடி?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், இந்தியக் குடிமக்களான பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிப்பது தொடர்பாக இந்திய மத்திய உள்துறை அமைச்சு சட்ட ஆலோசனையைப் கோரியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முருகன், சாந்தன், நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு முடிவு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன், சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகிய  ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல் களத்தில் சூடுபிடிக்கப்போகும் இலங்கைத் தமிழர் படுகொலை விவகாரம்

தமிழ்நாட்டில் திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழர் பிரச்சி்னை மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் – இந்தியாவில் ரணில் வாக்குறுதி

போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் அனைத்துலக பங்களிப்புக்கு தமது அரசாங்கம் தயங்கவில்லை என்றும், ஆனாலும், இறுதி தீர்ப்பு உள்நாட்டு நீதிமுறைமைகளுக்கு ஏற்பவே வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

சூளைமேடு கொலை வழக்கு – டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக நேற்று நீதிமன்றில் சாட்சியம்

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், ஈபிடிபியின் பொதுச்செயலருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான, கொலை வழக்கில் சாட்சி விசாரணை நேற்று சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.

100 கோடி ரூபா செலவில் கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம்

கிளிநொச்சியில் உலகத் தமிழ் பண்பாட்டு மையம் அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது. புதுச்சேரியில் நேற்று ஆரம்பமான உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பன்னாட்டு மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வடிகிறது வெள்ளம் – 49 சடலங்கள் மீட்பு

சென்னை நகர மக்களைப் பெருந்துயரில் ஆழ்ந்தியுள்ள வெள்ளம் இன்று சற்று வடியத் தொடங்கியுள்ள நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

தத்தளிக்கும் சென்னை – தவிக்கும் மக்கள் (படங்கள்)

பெருமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால் மூழ்கடிக்கப்பட்ட சென்னை நகரத்தின் பெரும் பகுதி இன்னமும் வெள்ளத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றது. இலட்சக்கணக்கான மக்களை அநாதரவாக்கியுள்ள வெள்ளம், இன்னமும் வடியாத நிலையில், நள்ளிரவில் இருந்து மீண்டும் மழை பெய்து வருகிறது.

ஊடகங்களையும் முடக்கியது சென்னைப் பெருவெள்ளம்

சென்னையில் ஏற்பட்டள்ள பெருவெள்ளத்தினால், இந்தியாவின் பழம்பெரும் நாளிதழான ‘தி ஹிந்து’ 137 ஆண்டுகளில் முதல் முறையாக நேற்று வெளிவரவில்லை. அத்துடன் ஜெயா மற்றும் புதிய தலைமுறைத் தொலைக்காட்சிகளும் சேவையை நிறுத்தியுள்ளன.