எழுத்தாளர் ஜெயகாந்தன், பாடகர் நாகூர் ஹனீபா ஒரே நாளில் மறைவு
பிரபல தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனும், பிரபல இஸ்லாமியப் பாடகர் நாகூர் ஹனீபாவும், நேற்று சென்னையில் காலமாகினர். பிரபல எழுத்தாளரான ஜெயகாந்தன், உடல் நலக்குறைவால் நேற்றிரவு 9 மணியளவில், காலமானார். அவருக்கு வயது 81.