மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் முன்னர் வழிபாட்டு இடம் இருக்கவில்லை

திருகோணமலை புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் விகாரையோ வழிபாட்டு இடமோ முன்னர் இருந்திருக்கவில்லை என சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணிகளை விடுவிக்கக் கூடாது

வடக்கு மாகாணத்தில் இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள தேசியப் பாதுகாப்புடன் தொடர்புடைய காணிகளை ஒருபோதும் விடுவிக்கக் கூடாது என, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்  நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார்.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பதவி விலக வேண்டும்

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் சிறிலங்காவுக்குகு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக  சிறிலங்கா மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர், பிரதமர், அமைச்சர்களுக்கு உதவ 37 ஆலோசகர்கள்

சிறிலங்கா அதிபர், பிரதமர் மற்றும் ஏழு அமைச்சரவை அமைச்சர்களுக்கு உதவுவதற்காக அரசாங்கம் 37 ஆலோசகர்களை நியமித்துள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாகாண சபை தேர்தல் பிரச்சினையைத் தீர்க்க சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழு

மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க ஒரு சிறப்பு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அனுரவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு 15 மில்லியன் ரூபா செலவு

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து , தனியாக பொது வழக்குத்தொடுநர் பணியகம் உருவாக்கப்படுவதை கடுமையாக எதிர்ப்பதற்கு,  சட்டமா  அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம் ஒருமனதாக, தீர்மானித்ததுள்ளது.

ரணில் குறித்து விசாரிக்க சட்டமா அதிபருக்கு தெரியாமல் பிரித்தானியா சென்றது சிஐடி

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வூல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம் அனுப்பியதாகக் கூறப்படும் அழைப்புக் கடிதத்தின் நம்பகத்தன்மையை ஆராய ஐந்து பேர் கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழுவொன்று பிரித்தானியா சென்றுள்ளது.

சுமந்திரன், சாணக்கியனை சந்தித்தார் இந்திய தூதுவர்

சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஆகியோரைச் சந்தித்துள்ளார்.