மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எல்லை மீறுகிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் – சிறிலங்கா பிரதிநிதி விசனம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயித் ராட் அல் ஹுசேன், எல்லைமீறி வார்த்தைகளை வெளியிட்டுள்ளதாக, ஜெனிவாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க விசனம் தெரிவித்துள்ளார்.

ஐ.நாவுக்கு சாட்சியமளிப்போரை கண்காணிக்க கிராமங்களில் அலையும் புலனாய்வாளர்கள்

சிறிலங்காவில்  மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உள்ளூர் விசாரணைகளில் சாட்சியம் அளித்தவர்கள் ஐ.நா மனித உரிமை ஆணயாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்குச் சாட்சியம் அளிக்க முடியாதவாறு அச்சுறுத்தப்படுவதாக, நீதி மற்றும் சமாதானத்துக்கான அமைப்பின் தலைவர் அருட்தந்தை மங்களராஜன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் கரு ஜெயசூரிய?

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் சிறிலங்கா அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரிய நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண் மாஸ்டர் இந்தியாவுக்குத் தப்பிவிட்டாராம்

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைகளுக்கு சாட்சியப் படிவங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மீரியபெத்தவில் இன்று 2 சடலங்கள் மீட்பு – உதவ வருகிறது பாகிஸ்தான் இராணுவக்குழு

மலையகத்தில் நிலச்சரிவில் சிக்கிய மீரியபெத்த தோட்டத்தில், மண்ணுக்குள் புதைந்து போன இருவரின் சடலங்கள் இன்று  நடத்தப்பட்ட தேடுதலின் போது மீட்கப்பட்டுள்ளன. (படங்கள் இணைப்பு)

நிலச்சரிவில் அநாதரவான சிறுவர்களை வட மாகாணசபையிடம் ஒப்படைக்க சிறிலங்கா மறுப்பு

மலையகத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்த பகுதியில் அண்மையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களை வடக்கு மாகாணசபையிடம் ஒப்படைக்க முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

சிரியாவுக்குச் செல்ல முயன்ற மாலைதீவு ஜிகாதிகள் சிறிலங்காவில் கைது

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து போரிடுவதற்குச் செல்வதற்காக சிறிலங்கா வந்த மூன்று மாலைதீவு பிரஜைகள், கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தல் குறித்த வர்த்தமானி அறிவிப்பை வரும் 19ம் நாள் வெளியிடுகிறார் மகிந்த

அதிபர் தேர்தல் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வரும் 19ம் நாள் வர்த்தமானி மூலம் வெளியிடுவார் என்று சிறிலங்கா அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிடிவாதத்தை தளர்த்தினார் ரணில் – போட்டியில் இருந்து ஒதுங்க முடிவு

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், ஐதேக சார்பில், போட்டியிடப் போவதாக கூறி வந்த அந்தக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது நிலைப்பாட்டைத் தளர்த்திக் கொண்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

முன்றாவது முறையும் போட்டியிட முடியுமா? – உயர்நீதிமன்றிடம் விளக்கம் கோரினார் மகிந்த

18வது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைய மூன்றாவது முறையாக, அதிபர் பதவிக்குத் தான் போட்டியிட முடியுமா என்பது தொடர்பான சட்ட விளக்கத்தை வழங்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சிறிலங்கா உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.