மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

அலவி மெளலானா காலமானார்

மேல் மாகாண முன்னாள் ஆளுனரும், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சருமான அலவி மெலானா இன்று மாலை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார். அவருக்கு வயது 84 ஆகும்.

அனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் – சிறிலங்கா அதிபர்

அனைத்துலக ஆதரவுடனேயே எதிர்காலத்தை வெற்றி கொள்ள முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான பயணம்  எனும் தொனிப்பொருளில் நேற்று பண்டாரநாயக்க அனைத்துலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வடக்கு கடலில் மீன்பிடிக்க தென்பகுதி மீனவர்களுக்கு தடை – அனுமதித்த அதிகாரிகளுக்கும் சிக்கல்

வடக்கு கடலில் தென்பகுதி மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி அளித்த அதிகாரிகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றக் கூடாது – அஸ்கிரிய பீடாதிபதி

வடக்கில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் அகற்றப்படக் கூடாது என்று, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான, வண. வேரககொட சிறி குணரத்ன தேரர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தில் ஐந்து புதிய மேஜர் ஜெனரல்கள்

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து பிரிகேடியர்கள், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 2016 ஏப்ரல் 28ஆம் நாள் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், இந்தப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சலாவ வெடிவிபத்து – இராணுவத்தினர், பொதுமக்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை

சலாவ இராணுவ முகாமின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஜப்பான் சென்றார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், நேற்றிரவு ஜப்பானின் நரிடா விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை – வாக்கெடுப்பை புறக்கணித்த இரு முக்கிய அமைச்சர்கள்

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், இரண்டு முக்கிய அமைச்சர்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி

நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் தோல்வி கண்டது.

நம்பிக்கையில்லாப் பிரேணையைக் குழப்பிய நாடாளுமன்ற ஒலியமைப்புத் தொகுதி

சிறிலங்கா நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் சமர்ப்பிக்கப்பட்ட  நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.