மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

நாடாளுமன்றம் செல்வதற்கு அனுமதி கோரும் கம்மன்பிலவின் மனு நிராகரிப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான, உதய கம்மன்பில, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதித்தால் ஆபத்தாக அமையும் – சரத் பொன்சேகா

போர்க்குற்ற விசாரணையை இனிமேலும் தாமதிப்பது, சிறிலங்காவுக்கு மேலும் அழுத்தங்களைக் கொடுக்கும் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியும், அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தில் அவுஸ்ரேலியப் போர்க்கப்பல்

அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் என்ற ஏவுகணைப் போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய உதவியுடன் திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி

இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களிடம் மன்னிப்புக் கோரியது சிறிலங்கா காவல்துறை

சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதிக் காவல்துறை மா அதிபர் ரஞ்சித் பெரேரா, ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியுள்ள சிறிலங்கா காவல்துறை, அவருக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

இந்த ஆண்டில் இந்தியாவுடன் எட்கா உடன்பாடு – சிறிலங்கா பிரதமர்

இந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு இந்த ஆண்டில் கையெழுத்திடப்படும் என்ற சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

புலிகளால் கைவிடப்பட்ட பதுங்குகுழியில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு

மன்னார், மடு பிரதேசதத்தில் உள்ள பாலம்பிட்டியில் விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் இருந்து வெடிபொருட்கள் பலவற்றை  மீட்டுள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமனம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கான ஆலோசகராக ஹரீம் பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரிடம் இருந்து ஹரீம் பீரிஸ் இன்று நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனக் காணியில் 400 குடும்பங்களைக் குடியமர்த்த திட்டம்

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த 400 குடும்பங்கள், காங்கேசன்துறையில் சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான காணியில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் – மாகாணசபை தேர்தல் சட்டத்தில் திருத்தம்

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு 30 சதவீத இடமளிக்கும் வகையில், சிறிலங்காவின் மாகாணசபைகள் தேர்தல் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்றுமுன்தினம் அனுமதி அளித்துள்ளது.