மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

சரத் பொன்சேகாவிடம் இருந்து பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறித்து. அமைச்சரவையை விட்டு அவரை வெளியேற்ற வேண்டும் என்று கூட்டு எதிரணி வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்கா இராணுவத் தளபதியைப் பாராட்டுகிறார் மகிந்த

சிறிலங்கா இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவை நாட்டு மக்கள் பாராட்ட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் – வீரவன்ச போர்க்கொடி

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்திய, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை, அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மகிந்தவின் அரசியல், இந்தியாவுடனான கூட்டமைப்பின் உறவு குறித்து அமெரிக்கா கரிசனை

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் செயற்பாடுகள் மற்றும் இந்தியாவுடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறவுகள் தொடர்பாக அறிந்து கொள்வதில், அமெரிக்கா ஆர்வத்தை வெளிப்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

பல்கேரியாவுக்கு 10 மில்லியன் டொலருக்கு ஆயுத தளபாடங்களை விற்கிறது சிறிலங்கா

பல்கேரியாவுக்கு 10 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை விற்பனை செய்யும் உடன்பாடு ஒன்றில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு கையெழுத்திட்டுள்ளது.

டிசெம்பருக்குள் புதிய அரசியலமைப்பு – இந்தியா, அமெரிக்காவிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி

இந்த ஆண்டு இறுதிக்குள், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்காவிடமும், இந்தியாவிடமும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கும் – சம்பந்தனிடம் சுஷ்மா வாக்குறுதி

புதிய அரசியலமைப்பை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்தியா தேவையான அழுத்தங்களை கொடுக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இயற்கை எரிவாயு மின் திட்டம்- சீனாவுடன் பேசுகிறது சிறிலங்கா

அம்பாந்தோட்டையில், இயற்கை எரிவாயு மின் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக, சீனாவுடன் பேச்சுக்களை நடத்தி வருவதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தென் மாகாணசபையில் தோற்கடிப்பு

அனைத்து மாகாணசபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்தும் வகையில், அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைவு தென் மாகாணசபையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.