மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

வடக்கு, கிழக்கு இணைப்பு குறித்து சிங்கள மக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை – சம்பந்தன்

அரசியலமைப்பின் ஊடாக பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்படுவதால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைவதை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்க வேண்டியதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற வேண்டும்- ஹக்கீம்

வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற ​வேண்டும் என்றும் அது தொடர்பாகப் பேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு- தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க முயற்சி

கொழும்பு- தூத்துக்குடி இடையில் மீண்டும் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் – கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன

புதிய அரசியலமைப்பு சமஷ்டிக்கான எந்த அடையாளத்தையும் கொண்டிருக்காது என்றும், ஒற்றையாட்சியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியலமைப்பு விவகார நிபுணருமான கலாநிதி ஜெயம்பதி விக்கிரமரத்ன.

இடைக்கால அறிக்கை – என்ன சொல்கிறார் சம்பந்தன்?

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முன்னேற்றகரமாக இருக்கின்றன.  ஆனால் இது இறுதி முடிவல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ரொஹிங்யா அகதிகளை அச்சுறுத்திய அக்மீமன தயாரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கல்கிசையில் மியான்மாரின் ரொஹிங்யா அகதிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் நுழைந்து அச்சுறுத்தல் விடுத்த சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த அக்மீமன தயாரத்ன தேரரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சியை நீர்த்துப்போகச் செய்யாது – சிறிலங்கா பிரதமர்

புதிய அரசியலமைப்பு ஒற்றையாட்சி தன்மையை எந்த வழியிலும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்திருக்காது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் மீது திரும்பும் சீனாவின் அக்கறை

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதில் சீனா அக்கறை கொண்டுள்ளதாக,  சமகால உலக ஆய்வு நிலையம் மற்றும் சீன பட்டுப்பாதை சிந்தனை குழாமின் பணிப்பாளர் நாயகம் ஜின் ஷின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஏற்றுமதித் தடை – சிறிலங்காவுக்கு ஆபத்து

சிறிலங்காவில் இருந்து கடலுணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதிக்கும் நிலை ஏற்படலாம் என்று சிறிலங்காவின் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் மகிந்த அமரவீர எச்சரித்துள்ளார்.

போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன் – சரத் பொன்சேகா

எனது கட்டளைக்கேற்ப போர் செய்த எவரையும் தண்டிக்க இடமளிக்கமாட்டேன், அதேவேளை, போரில் குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முன்வரமாட்டேன்  என்று சிறிலங்கா அமைச்சரான  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.