மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இனவாதமே மகிந்தவைத் தோற்கடித்தது – ராஜித சேனாரத்ன

மகிந்த ராஜபக்ச கடந்த அதிபர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டமைக்கு இனவாதமே காரணம் என்று சிறிலங்கா அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று யாழ்ப்பாணத்தில் பொது அமர்வில் பங்கேற்கிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்

உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் நாளை மறுநாள் யாழ்ப்பாணத்தில் பொது அமர்வு ஒன்றில் பங்கேற்கவுள்ளார்.

ஐ.நா, அமெரிக்காவிடம் முறையிட்ட நாமல்

அமைதியாகப் போராட்டம் நடத்திய தம்மை சிறிலங்கா காவல்துறை கைது செய்திருப்பதாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரிடமும், அமெரிக்காவிடமும் முறையிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளர் கட்டுநாயக்கவில் கைது

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் முன்னாள் செயலாளரான ஊர்நிலா இரேஷா சில்வா கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தயார்படுத்தல்களில் இறங்கியது தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் சிறிலங்காவின் தேசிய தேர்தல் ஆணைக்குழு இறங்கியுள்ளதாக, மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் தெரிவித்துள்ளார்.

மைத்திரி, ரணிலின் வாக்குறுதியை நம்ப வேண்டாம்- மகாநாயக்கரை கோருகிறார் கம்மன்பில

புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரரிடம், கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அனைத்து தடைகளும் நீங்கின

உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு இருந்த கடைசியான தடைகளும் நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மூன்று சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டன.

ஜனவரி 20இல் உள்ளூராட்சித் தேர்தல்?

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் ஜனவரி 20ஆம் நாள் அல்லது அதனை அண்டிய ஒரு நாளில் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சிறிலங்கா அமைச்சரும் நாடாளுமன்ற அவை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணியை உருவாக்குகிறது ஈபிடிபி

வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

திருகோணமலை எண்ணெய்க் குதங்களின் அபிவிருத்தி குறித்து இந்தியா- சிறிலங்கா பேச்சு

திருகோணமலை எண்ணெய்க் குதங்களை கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்திய, சிறிலங்கா கூட்டுப் பணிக் குழு பேச்சுக்களை நடத்தி வருகிறது.