மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

சிறிலங்காவில் உள்ள சீனத் தூதரகத்தில் புதிய பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றுள்ள சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் மூத்த கேணல் சூ ஜியான்வேய் இன்று சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவைச் சந்தித்தார்.

சிதம்பரத்துக்கான திருவாதிரை கப்பல் சேவை திட்டம் ரத்து

சிதம்பரத்தில் நடைபெறும் திருவாதிரை உற்சவத்தில் ஈழத்து பக்தர்கள் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறையில் இருந்து காரைக்கால் துறைமுகத்துக்கு நடத்தத் திட்டமிட்டிருந்த பயணிகள் கப்பல் சேவை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசை வீழ்த்த பகல்கனவு காண்கிறார் மகிந்த

புதிய ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு மகிந்த ராஜபக்ச பகல் கனவு காண்கிறார் என்றும், ஆனால், 2020 வரை, மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என்றும், சிறிலங்கா அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்த சிறிலங்கா அதிபர் உத்தரவு

வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைகளை விரிவுபடுத்தி, வனவிலங்குகள் வலயமாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனம் செய்யுமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் சிறிலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள்

கொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர்.

ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்காக தேசிய துக்க நாள் இல்லை

சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அறிவிக்கப்பட்டிருந்த தேசிய துக்க நாளை சிறிலங்கா அரசாங்கம் விலக்கிக் கொண்டுள்ளது.

புதிய அரசியலமைப்பில் வட- கிழக்கு இணைப்பும் இல்லை, சமஷ்டியும் இல்லை

புதிய அரசியலமைப்பின் மூலம், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படவோ, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படவோ மாட்டாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும் அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்தார்.

உலகின் மிக உயர்ந்த நத்தார் மரம் – கொழும்பில் தயார்நிலையில்

உலகின் மிக உயரமான நத்தார் மரத்தை நிறுவும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுகத் திடலிலேயே, இந்த நத்தார் மரம் நிறுவப்பட்டுள்ளது.

உயிர் கொல்லும் ஏ-9 நெடுஞ்சாலை – 2016இல் மாத்திரம் 117 பேர் பலி

சிறிலங்காவில் 2016 ஆம் ஆண்டு அதிகபட்ச விபத்துக்கள், யாழ்ப்பாணம்- கண்டி இடையிலான ஏ-9 நெடுஞ்சாலையிலேயே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை உடன்பாடு – முழு விபரங்களையும் அம்பலப்படுத்தக் கோருகிறது ஹெல உறுமய

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக சீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் செய்துள்ள புரிந்துணர்வு உடன்பாடு பற்றிய முழுமையாக தகவல்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது.