மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் விரைவில் கைது

அம்பாந்தோட்டையில் நீதிமன்றத்தின் தடையை மீறி, நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப் பேர் அடுத்த சில நாட்களுக்குள் கைது செய்யப்படவுள்ளனர்.

கலப்பு நீதிமன்ற பரிந்துரை – சிறிலங்கா அதிபரின் நிலைப்பாடு இன்று வெளியாகும்?

நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள, கலப்பு நீதிமன்ற விசாரணைப் பரிந்துரை தொடர்பான, தனது நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மங்கள சமரவீர நாளை பிரித்தானியாவுக்குப் பயணம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அதிகாரபூர்வ பயணமாக நாளை பிரித்தானியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இராணுவம், காவல்துறை தலையிடாது – சிறிலங்கா பாதுகாப்புச் செயலர்

போரின் போது இடம்பெற்ற கொடுமைகள் தொடர்பாக நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியுடன் கருத்துக்களைப் பகிர்ந்தவர்கள் விடயத்தில் சிறிலங்கா இராணுவமோ, காவல்துறையோ தலையீடு செய்யமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன  ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசு ஏற்காது – லக்ஸ்மன் யாப்பா

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட, நல்லிணக்க பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

கலப்பு விசாரணைக்கு பரிந்துரைத்தது ஏன்?- கலந்தாய்வு செயலணி விளக்கம்

பாதிக்கப்பட்ட மக்கள் உள்நாட்டு விசாரணை மீது நம்பிக்கை கொள்ளாததாலும், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான நிபுணத்துவம் உள்நாட்டில் இல்லை என்பதாலுமே, கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டைக்கு 1 மில்லியன் சீனர்கள் வரவுள்ளனரா?

அம்பாந்தோட்டையில் சீனாவின் திட்டங்களில் பணியாற்ற ஒரு மில்லியன் சீனர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கு நுழைவிசைவுக்கு விண்ணப்பித்துள்ளதாக, ஜாதிக ஹெல உறுமய வெளியிட்டிருந்த தகவலை சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் சீனாவின் இராணுவத் தளமா? – சிறிலங்கா நிராகரிப்பு

அம்பாந்தோட்டையில் சீனா தனது கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள எதிர்பார்க்கக் கூடும் என்று வெளியாகும் தகவல்களை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

துப்பாக்கிகளால் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது- மகிந்த அமரவீர

துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியாது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலரும், சிறிலங்கா அமைச்சருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ரவிராஜ் கொலை வழக்கு – சட்ட மாஅதிபரும் மேல்முறையீடு செய்ய திட்டம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் ஜூரிகள் சபையின் முடிவுக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.