மே-18 இல் வெற்றிவிழா இல்லை – போரில் மரணித்த அனைவரையும் நினைவு கூர ஏற்பாடு
வரும் மே 18ம் நாள் சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக அனுஷ்டிக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றி கொண்ட மே 18ம் நாள் முன்னர், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால், சிறிலங்காவில் போர் வெற்றி விழாவாக கொண்டாடப்பட்டு வந்தது.
இது தற்போது ஆயுதப்படையினரின் நாளாகப் பிரகடனம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பான நிகழ்வு இந்த மாத இறுதியில் மாத்தறையில் நடைபெறும்.
இந்த நாள், சிறிலங்காவில் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூரும் நாளாக கடைப்பிடிக்கப்படவுள்ளது என்று அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.