மேலும்

பளையில் அதிகாலையில் நடந்த கோர விபத்து – நெல்லியடி வாசிகள் ஐவர் பேர் பலி

palai-accidentதென்மராட்சி- பளைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில், அந்த இடத்திலேயே நான்கு பேர் பலியானதுடன், மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து மத்துகம நோக்கிச் சென்ற பேருந்தும், கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ஹையேஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் பளைப் பிரதேசத்தில் உள்ள தர்மங்கேணிக்கும், புதுக்காட்டுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

palai-accident

இந்த விபத்தில், நெல்லியடியைச் சேர்ந்த, ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களான சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவினரான 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்ததை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *