மேலும்

ரணில் வசமானது அலரி மாளிகை

RANILசிறிலங்காவின் புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க தனது அதிகாரபூர்வ செயலகத்தை அலரி மாளிகைக்கு மாற்றியுள்ளதுடன் இன்று அங்கு தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பிரதமரின் அதிகாரபூர்வ வசிப்பிடமாகவும் செயலகமாகவும் இருந்து வந்த அலரி மாளிகையை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது வசிப்பிடமாக மாற்றிக் கொண்டிருந்தார்.

இதனால், அவரது ஆட்சிக் காலத்தில் பிரதமர் செயலகம் பிளவர் வீதியில் இயங்கி வந்தது.

மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் அதனை பிரதமரின் செயலகமாக மாற்றியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.

ranil-templetrees

இன்று அவர் தனது கடமைகளை அலரி மாளிகையில் பொறுப்பேற்றார்.

எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அவரது மனைவி ஆகியோர் அலரி மாளிகையில் வசிக்கமாட்டார்கள் என்று பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *