மேலும்

Archives

ரத்தன தேரின் உடல்நிலை சீராக உள்ளது – எஸ்.பி மட்டும் பார்வையிட்டார்

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக, நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரின், உடல் நிலை நன்றாகவே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் – இந்தியப் பிரதமர்

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெருக்கமான இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு, உறுதி பூண்டிருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்துள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் அதுரலியே ரத்தன தேரர்

சிறிலங்கா அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவியில் இருந்து நீக்கக் கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர், இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

புதுடெல்லி சென்றார் சிறிலங்கா அதிபர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டாவது பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்பதற்காக,  சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன புதுடெல்லி சென்றுள்ளார்.

புலிகளின் தாக்குதலில் படுகாயமடைந்த சுமங்கல டயஸ் விமானப்படை தளபதியானார்

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக, எயர் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அவருக்கான நியமனத்தை வழங்கினார்.

‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு

நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது.

பயணத் தடையை நீக்குமாறு மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அதிபர் கோரிக்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பின்னர் மோசமடைந்திருந்த பாதுகாப்பு நிலைமைகளில், 99 வீதம் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் – ஆரம்பித்து வைத்தார் ரணில்

வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

3000 சிறிலங்கா படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களில் பாரிய தேடுதல்

ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.