மேலும்

Archives

மதம் பிடித்த பிராந்தியங்கள் – 2

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில்  மதம் செல்வாக்கு செலுத்துவது போல தெற்காசிய நாடுகளிலும்  மதம்,  அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தும்  நிலையை பெற்று கொண்டுள்ளது.  குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தெற்காசிய நாடுகளில் பிரதான பங்கு வகிக்கும் நாடுகளில் மத செல்வாக்கு மிகவும் அதிகரித்த நிலை உள்ளதை காணக் கூடியதாக உள்ளது.

விடுதலையானார் ஞானசார தேரர் – இனி ஆன்மீக வழி தான் என்கிறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.

அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படைக்கு அமெரிக்கா நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சி

அரபிக் கடலில் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளுக்கு, அமெரிக்க கடற்படையின் நாசகாரி கப்பலில் நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த அமெரிக்கா- சிறிலங்கா முடிவு

இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அமெரிக்காவும் சிறிலங்காவும் இணங்கியுள்ளன.

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு இந்தியா முழு ஆதரவு வழங்கும்- தரன்ஜித் சிங் சந்து

ஜிகாதி தீவிரவாதத்துக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் திலக் மாரப்பன சந்திப்பு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, நேற்றுக்காலை அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை தோற்கடிப்பது குறித்து சீன பிரதமருடனும் மைத்திரி ஆலோசனை

சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று சீனப் பிரதமர் லீ கெகியாங்கை சந்தித்து பேச்சு நடத்தினார். பீஜிங்கில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

சிறிலங்காவில் என்ன நடக்கிறது? – செய்திகளும் படங்களும்

வடமேல் மாகாணத்திலும், கம்பகா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த சில நாட்களாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளில் பெருமளவு வீடுகள், வணிக நிலையங்கள், தொழிற்சாலைகள், மசூதிகள் தீயிட்டு எரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் உள்ளன.

சிறிலங்காவின் பாதுகாப்புக்கு சீனா பாரிய உதவி – மைத்திரியிடம் சீன அதிபர் உறுதி

சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும்,  தீவிரவாதத்தை அடியோடு அழிப்பதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக, சீனா உறுதி அளித்துள்ளது.