5 ஆண்டுகளில் 3,791 மருத்துவர்கள் சிறிலங்காவை விட்டு வெளியேற்றம்
2020ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் 3,791 மருத்துவர்கள் வெளிநாட்டு வாய்ப்புத் தேடி சிறிலங்காவை விட்டுச் சென்றுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை 280 மருத்துவர்கள் வெளிநாடு செல்ல விண்ணப்பித்துள்ளதாகவும், பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
