மேலும்

Tag Archives: யாழ்ப்பாணம்

கிழக்கில் முழு அடைப்பு  – நீதி கோரித் திரண்ட மக்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும், ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும், கிழக்கில் நேற்று முழு அடைப்புப் போராட்டமும், பாரிய பேரணியும் நடத்தப்பட்டன.

வரவுசெலவுத் திட்டத்தில் சில முக்கிய யோசனைகள்

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் திருப்பி அனுப்பிய 8 பேரை தடுத்து வைக்க உத்தரவு

ரியூனியன் தீவில் இருந்து பிரெஞ்சு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்ட  64 பேர் எட்டுப் பேரை விளக்கமறியலில் வைக்க நீர்கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடக்கில் வெள்ளத்தினால் 72 ஆயிரம் பேர் பாதிப்பு

வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இடர் முகாமைத்துவ நிலையம் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளது.

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரம் ஆக அதிகரிப்பு

வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால், 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கண்ணிவெடிகளை அகற்ற 600 மில்லியன் ரூபாவை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்த ஆண்டில், 600 மில்லியன் ரூபாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெண்சுருட்டு விற்பனையை நிறுத்திய 107 நகரங்கள் – யாழ்ப்பாணம் முன்னணியில்

சிறிலங்காவில் 100இற்கும் அதிகமான நகரங்கள் வெண்சுருட்டு விற்பனையைப் புறக்கணிப்பதாக, சுகாதார அமைச்சை மேற்கோள்காட்டி, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மீள்குடியேற்றத்துக்கு 1 மில்லியன் பவுண்ட்களை வழங்குகிறது பிரித்தானியா

வடக்கு, கிழக்கில் புதிதாக விடுவிக்கப்பட்ட காணிகளில் மீளக் குடியேறியுள்ள 600 குடும்பங்களின், அடிப்படை உட்கட்டமைப்பு சேவைகளுக்காக பிரித்தானிய 1 மில்லியன் பவுண்ட்களை கொடையாக வழங்கியுள்ளது.

யாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக,  சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கரும்புலிகள் நினைவு கூரல்- அடையாளம் காணும் முயற்சியில் சிறிலங்கா காவல்துறை

கரும்புலிகள் நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் நேற்று அங்காங்கே சில நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.