முக்கிய விவகாரங்கள் குறித்து முஸ்லிம் காங்கிரசுடன் பேசவுள்ளது கூட்டமைப்பு
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்த வாரமளவில், முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு- கிழக்கு இணைப்பு விட்டுக் கொடுப்புகளுடன் இடம்பெற வேண்டும் என்றும் அது தொடர்பாகப் பேச சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாராக இருப்பதாகவும், அந்தக் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக வெளியான செய்திகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வெறுப்புணர்வைத் தூண்டுவதன் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்பாக, அரச புலனாய்வுப் பிரிவுகள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொது பலசேனா அமைப்புடனோ அல்லது அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களுடனோ தமக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் வணிக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுக்க சிறிலங்கா காவல்துறை தவறி விட்டதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.
குருநாகல் – மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இறுதிக்கட்டப் போரின் போது போர்க்குற்றங்கள் எவையும் இடம்பெறவுமில்லை, அவ்வாறு இடம்பெற்றதாக அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவுமில்லை. இந்தநிலையில், போர்க்குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அடுத்த வாரம் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.
வடக்கில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சிறிலங்கா படையினர் வசமுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான 6124 ஏக்கர் காணிகள், உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும், சிறுபான்மையினர் தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் ரீட்டா ஐசக் நாடியா வலியுறுத்தியுள்ளார்.