மேலும்

Tag Archives: மனித உரிமை

இன்னும் காத்திரமான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்தில் எடுத்து, சிறிலங்கா தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை உறுப்பு நாடுகள் பேரவையின் இந்த அமர்வில் முன்வைக்க வேண்டும் என்று அனைத்துலக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கமாட்டேன் – சிறிலங்கா அதிபர் திட்டவட்ட அறிவிப்பு

மனித உரிமை மீறல்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சிறிலங்காவுக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்குவதாயின் ஐ.நா மேற்பார்வை அவசியம் – சம்பந்தன்

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் மேலதிக காலஅவகாசத்தைக் கோரத் திட்டமிட்டுள்ள நிலையில், அவ்வாறு கால அவகாசம் வழங்குவதாயின், ஐ.நா மேற்பார்வை அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பொறுப்புக்கூறலில் வேகமில்லை – ரணிலை எச்சரித்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் தொடர்பான விவகாரங்களில், சிறிலங்கா மெதுவாகவே செயற்படுவதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன்,கவலை வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை குணப்படுத்த வேண்டியது முக்கியம் – அல் ஹுசேன்

போரினால் பாதிக்கப்பட்டவர்களின் இதயங்களை சிறிலங்கா குணப்படுத்த வேண்டியது முக்கியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வலியுறுத்தியுள்ளார்.

கலப்பு நீதிமன்ற பரிந்துரையை வரவேற்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் அறிக்கை, கலப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்துள்ளதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரவேற்றுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை – செயலணியின் பரிந்துரையை சிறிலங்கா நிராகரிப்பு

போர்க்கால மீறல்கள் குறித்த விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளையும் உள்ளடக்க வேண்டும் என்று, நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி முன்வைத்திருந்த அறிக்கையின் பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.

சிறிலங்காவும் சித்திரவதைகளும் – நியூயோர்க் ரைம்ஸ்

சிறிலங்காவில் அரசியல் மாற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புத் தொடர்பாக வாக்குறுதிகளை வழங்கியதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஆச்சரியமூட்டும் தேர்தலில் அதிபர் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றார்.

சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்கா அழைப்பு – புதிய துணை அதிபர் பென்ஸ் தொலைபேசியில் பேசினார்

அமெரிக்காவின் புதிய துணை அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, மைக் பென்ஸ் நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியிருப்பதுடன், அமெரிக்காவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.