மேலும்

Tag Archives: மகிந்த ராஜபக்ச

மகிந்த பதுக்கி வைத்திருந்த 3000 துப்பாக்கிகள், லம்போகினி கார், 68,000 மணிக்கூடுகள் மீட்பு

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரால் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த லம்போகினி ரக பந்தயக் கார், 68 ஆயிரம் சுவர் மணிக்கூடுகள் உள்ளிட்ட பொருட்களை சிறிலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மகிந்தவைத் தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றிய றோ அதிகாரி – பரபரப்புத் தகவல்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவைத் தோற்கடிப்பதில் இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ வின் கொழும்பு பணியகத் தலைமை அதிகாரியான இளங்கோ முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் விளம்பரங்களுக்காக 2 பில்லியன் ரூபா அரச பணத்தை ஏப்பம் விட்டார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரை விளம்பரங்களுக்காக, 2 பில்லியன் ரூபா அரசாங்கப் பயணத்தைச் செலவிட்டுள்ளதாக, நிதியமைச்சு அதிகாரிகளை ஆதாரம்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆட்சியைக் கைப்பற்ற 2000 படையினரை கொழும்பில் குவித்தார் மகிந்த

இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியைத் தொடர்வதற்காக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அதிபர் தேர்தலுக்கு முன்று நாட்களுக்கு முன்னதாக, 2000 சிறிலங்கா படையினரை கொழும்புக்கு நகர்த்தியதாக தகவல் வெளியிட்டுள்ளார், ஜனநாயக கட்சியின் தலைவரான சரத் பொன்சேகா.

சுதந்திரக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தெரிவானார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய தலைவராக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை எதிர்க்கட்சித் தலைவராக நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

விலகினார் மகிந்த – சுதந்திரக் கட்சியை கைப்பற்றினார் மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து தாம் இன்று விலகிக் கொள்வதாக, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைமையை மைத்திரியிடம் ஒப்படைக்க மகிந்த முடிவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை, புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைப்பதற்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, முடிவு செய்துள்ளதாக, சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரியைச் சந்திக்கிறார் மகிந்த

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அடுத்த சில நாட்களுக்குள் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

யோசிதவை கடற்படையில் இருந்து விலக்கி விட்டே பதவியைத் துறந்தார் மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தான் அலரி மாளிகையை விட்டு வெளியேற முன்னதாக, தனது இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவை சிறிலங்கா கடற்படையை விட்டு விலக அனுமதிக்கும் ஆவணங்களில் ஒப்பமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊவா முதல்வராக ஹரீன் – ராஜபக்ச குடும்பத்திடம் இருந்து கடைசி அதிகாரமும் பறிபோனது

ஊவா மாகாண முதலமைச்சராக ஐதேகவின் ஹரீன் பெர்னான்டோ இன்று மதியம் ஆளுனர் நந்தா மத்தியூ முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.