மேலும்

Tag Archives: போர்க்குற்ற விசாரணை

போர்க்குற்ற விசாரணைக்கு நான்கு வித நீதிக்கட்டமைப்புகளை ஆராய்கிறதாம் சிறிலங்கா

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள நான்கு விதமான நீதித்துறைக் கட்டமைப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இராணுவ அதிகாரிகளைக் காப்பாற்றத் தவறியுள்ளது சிறிலங்கா அரசு – உதய கம்மன்பில குற்றச்சாட்டு

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உள்ளிட்ட முக்கிய இராணுவ அதிகாரிகளை போர்க்குற்றச் சாட்டுகளில் இருந்து காப்பாற்ற அரசாங்கம் தவறியுள்ளதாக, குற்றம்சாட்டியுள்ளார், பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய  கம்மன்பில.

போர்க்குற்ற விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் – அனைத்துலக ஊடகம் எழுப்பும் கேள்விகள்

கலப்பு நீதிமுறைமை அமுல்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இவ்வாறானதொரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன? என்று huffington post ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார் Taylor Dibbert.

இறுதிப்போரில் பங்கெடுத்த தளபதிகளை கைவிடுகிறது அரசு – மகிந்த குற்றச்சாட்டு

இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய  மூத்த இராணுவ அதிகாரிகள்  பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்தகாலத் தவறுகளை ஏற்றுக்கொண்டாலே நல்லிணக்கம் சாத்தியம் – சந்திரிகா

கடந்தகாலத் தவறுகள் மற்றும் சிறுபான்மையினருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை ஏற்றுக் கொள்ளாமல், நல்லிணக்கம் சாத்தியப்படாது என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களுக்கு உயர்மட்டப் படை அதிகாரிகளே பொறுப்பு – சந்திரிகா குமாரதுங்க

போருடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பாக உள்ளக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது, உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் மீதே பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

போர்க்குற்ற விசாரணை குறித்து சிறிலங்கா அதிபருடன் கோத்தா பேச்சு

போர்க்குற்ற விசாரணை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச பேச்சுக்களை நடத்தியுள்ளதாக, பல்வேறு தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தன்னையும் இராணுவத்தினரையும் போர்க்குற்றங்களில் சிக்கவைக்க முயற்சி என்கிறார் மகிந்த

தன்னைப் போர்க்குற்ற வழக்கில் சிக்க வைக்கவும், தன்னையும், சிறிலங்கா இராணுவத்தினரையும் காட்டிக்கொடுத்து ஆட்சியைத் தக்கவைக்கவும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.

சிறிலங்காவை சிங்கள நாடாக உருவாக்க முயன்றால் தமிழீழம் உருவாகும் – மாவை எச்சரிக்கை

சிறிலங்காவைத் தனிச் சிங்கள நாடாக மாற்ற முயற்சித்தால், தமிழீழம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது போகும் என்று எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா.

போர்க்குற்ற விசாரணையை தட்டிக்கழித்து, உண்மை, நல்லிணக்கம் மீது கவனம் செலுத்தும் சிறிலங்கா

சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மை மற்றும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒவ்வொரு படிமுறையிலும் அவர்களுக்கு இதயசுத்தியுடன் ஆலோசனை வழங்கப்படுகிறதா என்பதை சிறிலங்கா அதிகாரிகளும் அனைத்துலக சமூகமும் உறுதி செய்யவேண்டும்.