மேலும்

Tag Archives: போர்க்குற்ற விசாரணை

உடனடியாகத் தொடங்காதாம் போர்க்குற்ற விசாரணை – காலஅவகாசம் கேட்கிறது சிறிலங்கா

போர்க்குற்ற விசாரணையை, உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும், இதனை ஆரம்பிக்க ஒரு ஆண்டு காலஅவகாசமேனும் தேவை என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விசாரணை நம்பகமானதாக இருப்பதற்கு வெளிநாட்டு நீதிபதிகள் முக்கியம் – சில்வியா கார்ட்ரைட்

சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் போர்க்குற்ற விசாரணைகளில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது என்று தெரிவித்துள்ளார் நியூசிலாந்தின் நீதிபதியான சில்வியா கார்ட்ரைட்.

சிறிலங்காவின் போர்க்குற்ற விசாரணைக்கு உதவத் தயார் – ஜேர்மனி வெளிவிவகார அமைச்சர்

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரணைகளை நடத்த சிறிலங்காவுக்கு உதவ ஜேர்மனி தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பிராங் வோல்டர் ஸ்ரெய்மேய்யர் உறுதியளித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு சம்பந்தன் அவசர கடிதம் – ஜெனிவாவில் சந்திக்கவும் திட்டம்

போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் என்பதை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேரில் சென்று வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா இராணுவத்தைக் காட்டிக் கொடுக்கிறது ஐதேக – சுசில்

வெள்ளைக்கொடி விவகாரத்தில் சிறிலங்கா படையினரைக்  காட்டிக்கொடுக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்ப 61 பௌத்த சிங்கள பேரினவாத அமைப்புடனுடன் மகிந்த உடன்பாடு

சிங்கள தேசத்தைக் கட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச 61 சிங்கள, பௌத்த பேரினவாத அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

மகிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முனைகிறது கூட்டமைப்பு – டிலான் பெரேரா

போர்க்குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவைத் தண்டிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அனைத்துலக சமூகமும் முயற்சிப்பதாகவும், அவரை மின்சார நாற்காலிக்குக் கொண்டு செல்லும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா.

மகிந்தவிடம் போர்க்குற்ற விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் இணங்காதாம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் அனைத்துலக போர்க்குற்ற விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் இணங்காது என்று, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர், ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

லண்டன் இரகசியப் பேச்சுக்களின் மர்மம் விலகியது

சிறிலங்கா அரசாங்க, தமிழர் பிரதிநிதிகள், அனைத்துலக சமூகப் பிரதிநிதிகளுக்கு இடையில் பிரித்தானியாவில் நடைபெறும் பேச்சுக்களில், போர்க்குற்ற விசாரணை குறித்தோ, அரசியல்தீர்வு குறித்தோ விவாதிக்கப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் உள்நாட்டு போர்க்குற்ற விசாரணை ஆரம்பம் – சிறிலங்கா அதிபர்

புதிய போர்க்குற்ற விசாரணை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.