மேலும்

Tag Archives: பிரித்தானியா

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவரின் பதவி விலகலை ஏற்றுக் கொண்டார் சிறிலங்கா அதிபர்?

பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதுவர் அமரி விஜேவர்த்தனவின் பதவி விலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா

லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா அதிபரின் உத்தரவு குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை – மஹேஷினி கொலன்ன

பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் அமர்த்தும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவு தொடர்பாக தமக்கு ஏதும் தெரியாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை?

சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சாணக்யபுரி மாநாட்டுக்கு சிறிலங்காவுக்கு மாத்திரம் அழைப்பு

வெளிநாடுகளில் உள்ள இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகர முதல்வர்கள் பங்கேற்கும் ப்ரவசி பாரதீய டிவாஸ் என்ற மாநாட்டுக்கு சார்க் நாடுகளில் சிறிலங்காவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்க, இந்திய, பிரித்தானிய நிபுணர்களின் உதவியுடன் தடயவியல் கணக்காய்வு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக நடத்தப்படவுள்ள தடயவியல் கணக்காய்வுக்கு இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா  போன்ற நாடுகளில் இருந்து நிபுணர்களின் உதவியைப் பெற சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 66 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது சிறிலங்கா

உலகளவிலான உணவுப் பாதுகாப்புச் சுட்டியில் 113 நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா 66 ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.

2018இல் வணிகம் செய்ய சிறந்த நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவுக்கு 111 ஆவது இடம்

2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது.

18 விமானங்களை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா விமானப்படை

சிறிலங்கா விமானப்படை ஜெட் போர் விமானங்கள் உள்ளிட்ட 18 புதிய விமானங்களைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது.