மேலும்

Tag Archives: ஜேவிபி

இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் நிறைவேறியது

2019ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும், கணக்கு அறிக்கைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை – 117 வாக்குகளுடன் நிறைவேறியது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 117 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளிக்கிழமை வரை சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு வரும் 23ஆம் நாள் – வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, உடனடியாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி?

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன.

நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ஐதேக, கூட்டமைப்பு, ஜேவிபி உச்சநீதிமன்றம் செல்கின்றன

அரசியலமைப்பை மீறி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்  அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தை கூட்டும் முடிவை சிறிலங்கா அதிபர் இன்னமும் எடுக்கவில்லை

நாடாளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று, அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மகிந்தவைப் பிரதமராக்குவதால் நெருக்கடி தீராது – ஜேவிபி

மகிந்த ராஜபக்சவை பிரதமராக கொண்ட இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதால் மட்டும், தற்போதைய நெருக்கடிகளைத் தீர்த்து விட முடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

20 ஆவது திருத்தச்சட்ட பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்காவின் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கான முன்மொழிவுகள் அடங்கிய பிரேரணையை ஜேவிபி இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.