மேலும்

Tag Archives: ஜேவிபி

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் ஜேவிபியின் முயற்சிக்கு ஆதரவு – இரா.சம்பந்தன்

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, ஜேவிபி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று கூட்டமைப்பின் தலைவர்,  இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான சோபா உடன்பாட்டினால் நாட்டின் இறைமைக்கு ஆபத்து – ஜேவிபி எச்சரிக்கை

அமெரிக்காவுடன், சோபா (SOFA) எனப்படும் படைகளின் நிலை குறித்த உடன்பாட்டில்,  சிறிலங்கா கையெழுத்திட்டால், நாட்டின் இறைமைக்கு பாதிப்பு ஏற்படும் என்று எச்சரித்துள்ள ஜேவிபி, இது குறித்து நாடாளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை – பின்வாங்கியது ஆளும்கட்சி

parliaதேசிய அரசாங்கத்தை அமைக்கும் பிரேரணை மீதான விவாதத்தை ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக்கவில்லை.

இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் நிறைவேறியது

2019ஆம் ஆண்டின் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாதங்களுக்கான அரசாங்க செலவுகளுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும், கணக்கு அறிக்கைக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்று அங்கீகாரம் அளித்துள்ளது.

ரணில் மீதான நம்பிக்கைப் பிரேரணை – 117 வாக்குகளுடன் நிறைவேறியது

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நம்பிக்கைப் பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் 117 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.

வெள்ளிக்கிழமை வரை சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் அமர்வு வரும் 23ஆம் நாள் – வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு நாடாளுமன்றம் கூடிய போது, உடனடியாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

வடக்கில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி?

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் இடம்பெற்று வரும் நிலையில், வடக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளன.

நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து ஐதேக, கூட்டமைப்பு, ஜேவிபி உச்சநீதிமன்றம் செல்கின்றன

அரசியலமைப்பை மீறி சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைக்க எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

மைத்திரி- மகிந்த சதியைத் தோற்கடிக்க எந்தப் பிரேரணைக்கும் ஆதரவு – ஜேவிபி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்  அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் சதித் திட்டத்தை தோற்கடிப்பற்காக கொண்டு வரப்படும் எந்த பிரேரணைக்கும், தமது கட்சி ஆதரவு அளிக்கும் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று மாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.